states

கல்லூரி மாணவிகளுக்கு விடுதி கட்டும் விவகாரம்: உயர் கல்வி அதிகாரிகளிடம் மாணவர் சங்கம் மனு

புதுச்சேரி, மார்ச் 4- கல்லூரி மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே விடுதி கட்ட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன் ஆகியோர் உயர்கல்வி த்துறை அதிகாரி சவுமியாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2016ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் தாகூர் அரசு கலைக் கல்லூரி மற்றும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு விடுதி கட்டுவதற்காக கருவடிக்குப்பம் பகுதியில் கல்லூரிகளுக்கு அருகாமையில் இடம் ஒதுக்கியது. ஆனால் 5 ஆண்டுகளாக நிதி ஏதும் ஒதுக்கப்ப டாததால் விடுதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் தாகூர் அரசு கலைக் கல்லூரி, பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி, மகளிர் தொழில்நுட்ப கல்லூரி என நான்கு கல்லூரிகள் செயல்பட்டு வரும் அப்பகுதியில் ஒரு அரசு விடுதி கூட இல்லாததால் மாணவ ர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் உயர்படிப்பு படிப்பதற்காக புதுச்சேரியின் கிராமப்புறங்க ளில் இருந்தும் காரைக்கால், மாஹே மற்றும் யானாம் ஆகிய இடங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து தங்கி பயின்று வருகின்றனர். ஆனால் கல்லூரிகளுக்கு அருகில் விடுதி இல்லாததால் மாணவர்கள் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வர வேண்டியுள்ளது.  மேலும் பெண்கள் பலர் கிருஷ்ணா நகர் அரசு விடுதியில் இருந்து பேருந்து வசதி இல்லாததால் தினசரி கல்லூரிக்கு சுமார் 6 கிலோ மீட்டர் நடந்தே செல்லும் அவலநிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மாணவர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஏற்ப இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடத்தில் விளை யாட்டு அரங்கம் கட்டப்போவதாகக் கூறி இடத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதிதாக விடுதி கட்ட ஒதுக்க ப்பட்டுள்ள இடம் என்பது கல்லூரிக்கு அருகாமையில் இருப்பது மட்டுமல்லாமல் பாதுகாப்பாகவும் உள்ளது. எனவே, அந்த இடத்தில் புதிதாக விளையாட்டு அரங்கம் அமைப்பதை கைவிட்டுவிட்டு, அந்த இடத்தில் மாணாவிகளுக்கான விடுதியை கட்ட வேண்டும்.