தரங்கம்பாடி, மே 11- செம்பனார்கோவில் அருகே உள்ள நடுக்கரை ஊராட்சிக்குட்பட்ட மேலப்பாதி கிராமத்தில் இயங்கி வரும் இந்து உதவி துவக்கப்பள்ளி சார்பில் மாணவர்கள், சத்துணவு ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிதி உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இப்பள்ளியின் முன்னாள் நிர்வாகி கோ.சுப்ரமணியன், பள்ளிக் குழு தலைவர் விஜயலட்சுமி சுப்பிரமணியன், நிர்வாகி ரமணன், செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் இப்பள்ளியில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள், சத்துணவு பணியாளர்கள், ஊராட்சி தூய்மை பணியாளர்கள், பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட 167 பேருக்கு நிதி உதவியாக தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டது. ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் புஷ்பலதா, ஊராட்சி தலைவர் பிரேம்குமார், தலைமையாசிரியர் விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.