மறு ஆய்வு செய்ய சிண்டிகேட் முடிவு
மதுரை, நவ. 8- மதுரை காமராஜர் பல்கலை.யில் 69 பேராசிரியர் பணி நியமனங்கள் குறித்து மறு ஆய்வு மேற்கொள்ள வியாழக்கிழமை நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. சிண்டிகேட் கூட்டம் துணை வேந்தர் மு.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைவேந்தாரக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பி.பி.செல்லத்துரையின் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப் பட்ட 69 பேராசிரியர் பணி நியமனங்கள் தொடர்பாக உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையிலான குழுவினர் அளித்துள்ள அறிக்கை குறித்து விவாதிக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து 69 பேராசிரியர்கள் பணி நியமனம் குறித்து மறு ஆய்வு நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதில் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட அனைத்தை யும் மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப் பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர்( பொறுப்பு) ஆர்.சுதா தரப்பினர், பேராசிரியர் கலைச்செல்வன் தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்குமார், சிண்டிகேட் உறுப்பினர் ஆர்.லட்சுமிபதி ஆகியோர் கொண்ட குழு அமைப்பது. விசார ணைக்குழு ஒரு வாரத்துக்குள் விசாரணை நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவுசெய்யப்பட்டது. பல்கலை. பதிவா ளரை தேர்ந்தெடுக்க மூவர் அடங்கிய சிறப்புக்குழு அமைக்க வும் முடிசெய்யப்பட்டது. பல்கலைக்கழக கல்லூரி மற்றும் உறுப்புக்கல்லூரி களில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள விரிவுரை யாளர்கள், கௌரவ விரிவுரையாளர்களுக்கு உயர்த்தப் பட்ட ஊதியம் வழங்க பல்கலைக்கழக நிதிக்குழுஒப்புதல் அளித்துள்ளது.