திருப்பூர், ஆக. 28 – திருப்பூர் குமார் நகர் அரசுப் பள் ளியில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது ரூ.6 ஆயிரத்து 500 கொடுத்தால்தான் புத்தகங்கள் வழங்க முடியும் என கட்டாய வசூல் மேற்கொள்ளப்பட்டதால் அதைக் கண்டித்து பெற்றோர், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப் புக்கான மாணவர் சேர்க்கை தற் போது நடைபெற்று வருகிறது. அதன்படி திருப்பூர் குமார் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வெள்ளி யன்று மாணவர் சேர்க்கை நடை பெற்றது. இதில், 11ஆம் வகுப்பு வணிகவியல் உள்ளிட்ட மூன்றா வது குரூப் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் ரூ.6 ஆயிரத்து 500 பணம் தர வேண்டும் என பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் கேட்டுள் ளனர். அரசுப் பள்ளியில் கூடுதல் பணம் வசூலிக்கக் கூடாது என்று சொல்லி இதற்கு பெற்றோர்கள் ஆட் சேபம் தெரிவித்துள்ளனர். எனினும் பள்ளி நிர்வாகத்தார், மாணவர் களை சேர்க்கை பட்டியலில் பெயரை சேர்த்துக் கொண்டாலும், பணம் கொடுத்தால்தான் புத்தகங் கள் தரப்படும் என்று சொல்லிய துடன், பணம் தராதவர்களுக்குப் புத் தகங்களைத் தராமல் நிறுத்தி வைத்துவிட்டனர். இதனால் ஆவேசமடைந்த பெற் றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் திருப்பூர் அவிநாசி சாலை, குமார் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். வாக னப் போக்குவரத்து மிகுந்த இப்ப குதியில் திடீரென சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மறியலில் ஈடு பட்டவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தலாம் என மறியலைக் கைவி டும்படி வற்புறுத்தினர். இதைய டுத்து, மறியல் கைவிடப்பட்டது. இதன்பின்னர் காவல் துறையி னர் பெற்றோரின் புகாரை மனுவாக எழுதித் தரும்படி கேட்டனர். அத்து டன் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில், அப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முடிவுப்படி, மேல்நிலை வகுப்புகளுக்குப் போதிய ஆசிரி யர்கள் இல்லாததால், கூடுதல் ஆசி ரியர்களை நியமித்து சம்பளம் தருவ தற்காக மாணவர் சேர்க்கையின் போது பணம் வசூலிப்பதாகத் தெரி விக்கப்பட்டது. எனினும், மாணவர் களிடம் கட்டாயப்படுத்தி பணம் கேட்கக் கூடாது. பணம் தராவிட் டால் புத்தகங்கள் தர மாட்டோம் என மறுப்பதும் சரியல்ல என்று பெற் றோர் தரப்பில் ஆட்சேபம் தெரிவித் தனர். இதையடுத்து மாணவர்க ளுக்கு புத்தகங்கள் வழங்க நிர்வா கத்தினர் ஒப்புக் கொண்டனர்.