tamilnadu

புரசைவாக்கம் சி.எஸ்.ஐ ஈவாட்ஸ் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்

சென்னை, ஜூலை 13- பள்ளிக்கட்டணத்தை உடனே செலுத்த  வற்புறுத்திய புரசைவாக்கம் சி.எஸ்.இ. ஈவார்ட்ஸ் பள்ளியை திங்களன்று (ஜூலை 13) பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். புரசைவாக்கத்தில் உள்ள ஈவாட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 2020-2021  கல்வியாண்டிற்கான கட்டணத்தை 10 சத வீதம் உயர்த்தி உள்ளது. அந்தக்கட்ட ணத்தை உடனே ஒரே தவணையாக செலுத்த  வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்க ளுக்கு குறுந்செய்தி அனுப்பியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டும் எந்த பதிலும் கூறாமல் அலைக்  கழித்தால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளி தலைமையாசிரியை அறையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையறிந்து அங்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கட்டணம் செலுத்த இயலாத பெற்றோர்கள் பாடபுத்தகங்களை பெற்றுக்கொள்ள அனும தித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.