புதுச்சேரி, நவ. 11- திட்டங்களை நிறைவேற்ற தடையாக உள்ள துணை நிலை ஆளுநரின் செயலை கண்டித்து மக்களவை முன் போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி அறிவித்தார். புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையின் கீழ் உள்ள மாற்றுத்திற னுடை யோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் மற்றும் மாவட்ட கிராம வளர்ச்சி நிறுவனமும் இணைந்து, பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டிற்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் முடநீக்கு உபகர ணங்கள் வழங்கும் விழாவை புதுச்சேரி சமூக நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு முட நீக்கு உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கி பேசுகையில், “புதுச்சேரி அரசு இல வச அரிசி, உதவித்தொகை, உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் 3 ஆண்டுகளாக செய்ய முடியவில்லை. நிர்வாகி, (துணை நிலை ஆளுநர்) அரசு செயலர், அதிகாரிகள் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடுவதில்லை” என்று குற்றம் சாட்டினார். புதுச்சேரியில் 125 அங்கன்வாடி ஊழி யர்களை தேர்வு செய்ய அமைச்சரவையில் முடிவு எடுத்து விண்ணப்பங்களும் கோரப் பட்டது. ஆனால், அங்கன்வாடி ஊழியர்கள் தேர்வை ரத்து செய்து விட்டனர். முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் அமைச்சரவை யில் எடுக்கும் முடிவை ரத்து செய்ய அதிகாரம் கொடுத்தது யார்? அமைச்சருக்கு தெரியாம லேயே இது நடந்துள்ளது என்றும் அமைச் சர் கூறினார். புதுச்சேரி அரசுத்துறைகளில் 7 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது.
அந்த காலி யிடங்களை நிரப்ப முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட செயலர்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்தோம். ஆனால் அதன்படி காலியிடங்களை நிரப்பு வதற்கு அங்கீகாரம் தரவில்லை என்றும் ஆளு நரை கடுமையாக சாடினார். புதுச்சேரியை விட 2 மடங்கு மக்கள் தொகையுள்ள கடலூருக்கு ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரிதான். சென்னையில் ஒரு திட்டத்தை அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்தால், அது தமிழகம் முழுவதும் உடனடி யாக செயல்படுத்தப்படுகின்றது. ஆனால் புதுச்சேரியில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தும், எந்த ஒரு வேலையும் நடப்பது இல்லை. எனவே புதுச்சேரி மாநிலத்திற்கு இவ்வளவு ஐஏஎஸ் அதிகாரிகள் தேவையா? என்ற கேள்வி எழுகிறது. எனவே மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தடையாக உள்ள நிர்வாகியின் (துணை நிலை ஆளுநர்) செயலை கண்டித்து குடியரசுத் தலைவர், பிரத மர், உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்ப உள்ளேன். அதன்பின்னரும் நிறைவேற்றப் படாவிட்டால் பாராளுமன்றத்தில் முன் போராட்டம் நடத்துவோம் என்றும் அமைச் சர் கந்தசாமி எச்சரிக்கைவிடுத்தார். விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், ஜெயபால் எம்.எல்.ஏ., சமூக நலத்துறை செயலர் ஆலிஸ் வாஸ், இயக்குநர் சாரங்கபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.