tamilnadu

img

20 ஆண்டுகள் ஆகியும் பணிநிரந்தரம் செய்யவில்லை

பூங்கா ஊழியர்கள் வேதனை

உதகை, டிச. 19 - உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் தினக்கூலியாக வேலை செய்யும் ஊழியர்கள் தங் களை பணிநிரந்தரம் செய்யவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இதனை கண்டுகளிக்க  ஆண்டு முழுவதும் பல லட் சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வருகின்ற மே மாதத்தில் 124 ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. அதனையொட்டி தாவ ரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.  இப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் கூறுகையில், இப்பூங்காவில் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறோம்.  குறைந்த பட்ச கூலியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 370 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது மலர் கண்காட்சிக்காக குளங்களில் உள்ள ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் பணி யில் ஈடுபட்டுள்ளோம்.20 ஆண்டுகளுக்கு மேலாக பூங்காவின் வளர்ச்சிக்கு உழைக்கும் எங்களுக்கு இன் னும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.