தரங்கம்பாடி, ஆக.13- மயிலாடுதுறை மாவட்டம் உக்கடை விளாகம் கிராமத்தில் மீன் குட்டையை இறால் குட்டையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் விவ சாயி ஒருவருக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் மீன்கள் வளர்ப்பதற்கு அனுமதி பெற்று 10 குட்டை கள் அமைத்து மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாயன்று அதிகாலை வேதா ரண்யத்தில் இருந்து உப்பு ஏற்றி வந்த லாரி உக்கடை விளாகம் கிராமத்தில் வயல் பகுதி சாலையில் செல்லும் போது வயலில் கவிழ்ந்து விபத்திற்குள் ளானது. இச்சம்பவம் அறிந்து விவசாயிகள் சென்று பார்த்த போது வயலில் உப்பு மூட்டைகள் சரிந்து கிடந்தன. தொடர்ந்து மீன் குட்டைகளை இறால் குட்டை களாக மாற்றுவதற்காக வேதாரண்யத்தில் இருந்து உப்பை கொண்டு வந்து மீன் குட்டையில் உள்ள தண்ணீரை உப்பு நீராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
உடனடியாக விவசாயிகள் குட்டையில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி போராட்டத்தில் ஈடு பட்டனர். விவசாயத்திற்கு என்று மின்சார இணைப்பு பெற்று தற்போது மீன் குட்டைகளை உப்பு நீராக மாற்றி இறால் குட்டையாக அமைப்பதால் கிரா மத்தில் உள்ள விளை நிலங்கள் உப்பு நீராக மாறி விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி உடனடியாக இறால் குட்டை அமைப்பதை தடை செய்யக் கோரி னர். இதையறிந்து அங்கு வந்த தரங்கம்பாடி தாசில் தார், விவசாயிகளிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுப்ப தாக கூறினார். உடனடியாக இறால் குட்டைகளாக மாற்றுவதை அதிகாரிகள் தடுக்கவில்லையெனில் போராட்டங்கள் தீவிரமடையும் என விவசாயிகள் தெரி வித்தனர்.