tamilnadu

img

தோழர்கள் பி.சுந்தரய்யா - பாரதிமோகன் நினைவு தினம்

தரங்கம்பாடி, மே 19- மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், குத்தாலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கோ.பாரதிமோகன், சுதந்திர போராட்ட வீரரும், தெலுங்கானா போராட்டத் தளபதியும் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான பி.சுந்தரய்யா ஆகியோரின் நினைவு தின பேரவைக் கூட்டமும், அண்மையில் மறைந்த மத்தியக் குழு உறுப்பினர் கே.வரதராஜன் இரங்கல் கூட்டமும் நாகை மாவட்டம், திருக்கடையூரில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், ஜி.ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், டி.இராசையன், டி.கணேசன், மாரியப்பன், அமுல்காஸ்ட்ரோ, ஒன்றியச் செயலாளர்கள் சி.மேகநாதன்(மயிலாடுதுறை), விஜயகாந்த் ஆகியோர் உரையாற்றினர்.  

கே.வி.க்கு அஞ்சலி
வட்டக்குழு உறுப்பினர்கள் டி.கோவிந்தசாமி, காபிரியேல், தமிழ் வாசகம், கே.பி.மார்க்ஸ், கண்ணகி, குணசேகர், மாதர் சங்க வட்டச் செயலாளர் ராணி, வாலிபர் சங்க வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன், மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன் மற்றும் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தோழர் கே.வரதராஜன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

திருத்துறைப்பூண்டி  
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட. தஞ்சை மாவட்ட ஸ்தாபன தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முதுபெரும் தோழர் கோ. பாரதிமோகன் 16 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச்செயலாளரும், தெலுங்கானா புரட்சிக்கு வித்திட்ட முதுபெரும் தோழர் பி.சுந்தரய்யா 35 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியும் செவ்வாயன்று திருத்துறைப்பூண்டி  கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், நகர குழு கே.கோபு, ஆர்.எம்.சுப்பிரமணியன், எஸ்.தண்டபாணி, ஏ.கே.செல்வம், எம்.ஜெயபிரகாஷ், ஒன்றியக்குழு ஆர்.வேதையன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் எம்.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.