tamilnadu

img

வெளிநாடுகளில் தவிக்கும் மாணவர்கள்-மீனவர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார்

சென்னை, மார்ச் 19- வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மருத்துவ மாணவர்கள் மற்றும் மீன வர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் வியாழ னன்று(மார்ச் 19) நேரமில்லா நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரா னில் உள்ள மீனவர்களை மீட்க வேண்  டும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பி னர் ஆஸ்டின் பேரவையில் கவன ஈர்ப்புத்தீர்மானத்தை கொண்டு வந்தார்.  அப்போது பேசிய அவர், “குமரி  மாவட்டத்தைச் சேர்ந்த 596 மீனவர்கள்  ஈரானில் உணவில்லாமல் தவிக்கி றார்கள். நாகையைச் சேர்ந்த 20 மீனவர்  கள் ஈரான் நாட்டு படகில் தவித்துக்  கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தி ருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு படிக்கச் சென்ற 300 மாணவர்கள் இன்னும் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். மீனவர்களையும், மாணவர்களை யும் மீட்க கடிதம் மட்டும் எழுதினால் போதாது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை. எனவே, மீன் வளத்  துறை அமைச்சரையும், மூத்த அமைச் சர்களையும் தில்லிக்கு அனுப்பி பிரத மரை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும்.  அனைவரையும் விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜெ. பிரின்ஸ், “குமரி மாவட்டத்தைச் சேர்ந்த  மீனவர்களையும், தமிழக மாணவர்க ளையும் மீட்க உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும். மத்திய வெளியுறவுத்  துறை இதுவரை கண்டுகொள்ள வில்லை. மத்திய அரசு தனிக் கவனம்  எடுத்து அனைவரையும் மீட்க வேண்டும்” என்றார். மனித நேய ஜனநாயக கட்சியை  சேர்ந்த தமிமுன் அன்சாரி,“  பிலிப்பைன்  சில் படித்த மாணவர்கள் மலேசியா நாட்டுக்கு வந்திருப்பதாகவும், கோலா லம்பூரில் தங்கி இருப்பதாகவும் தகவல்  வந்துள்ளது. அவர்கள் விமானம் இல்லா ததால் இந்தியா திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கு தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். விரைவில் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து பேசிய வரு வாய்துறை அமைச்சர் ஆ.ர்.பி. உதய குமார், “ வெளிநாடுகளில் சிக்கியுள்ள மீன வர்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் வெளியுறவுத் துறையை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், விமானங்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

மலேசியாவில் சிக்கியுள்ள 170 மாண வர்கள் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் அவர்கள் பரி சோதனைக்கு பிறகு தமிழகம் அழைத்து  வரப்படுவார்கள் என்றும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் 200 இந்திய மாணவர்களை மீட்ப தற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் கூறினார். இதேபோல் ஈரானில் பல்வேறு பகுதி யில் சிக்கித் தவித்த தமிழகத்தை சேர்ந்த  659 மீனவர்களை மீட்க மத்திய உள்துறை அமைச்சகத் திற்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் ஈரா னில் உள்ள இந்திய தூதரக அதிகாரி கள் தமிழக மீனவர்களுடன் தொடர்பில்  உள்ளதால் மீனவர்கள் பத்திரமாக உள்  ளனர் என்று மத்திய அரசு உறுதி யளித்ததாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார், “மீன வர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதால்  அனைவரும் விரைவில் நாடு திரும்பு வார்கள்” என்றார்.