tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் புதிதாக 5 குடும்பத்தினர் இணைந்தனர்

திருத்துறைப்பூண்டி, நவ.27- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.சண்முகம் தலைமையில் 5 குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவல கத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு,  கே.என். முருகானந்தம், கே.தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.என்.தங்கராசு, ஆர்.வேதையன், ஆர்.மதியழ கன், ஏ.கே வேலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.