தரங்கம்பாடி, மே 30- நாகை மாவட்டம் தரங்கம்பாடியில், சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியை சேர்ந்த கூழையாறு, கொட்டாய்மேடு, பழை யாறு உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ மக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அரசினால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை, இரட்டை மடிவலை, அதிவேக மோட்டார் இயந்திரம் பொருத்தப்பட்ட படகு மூலம் மீன்பிடி தொழில் செய்வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதி காரிகளை அனைத்து கிராம பஞ்சாயத்தார்க ளுடன் நேரில் சந்திப்பது உள்ளிட்டவை தீர்மா னிக்கப்பட்டது.