tamilnadu

img

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஆக.18- மயிலாடுதுறை அருகேயுள்ள வரத ப்பட்டு ஊராட்சி திருவாளப்புத்தூரில் 14 வயது சிறுமி காமக் கொடூரக் கும்பலால் 2  ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டு தற்போது அச்சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. காவல் ஆய்வாளர் முதல் முன்னாள் ஊராட்சி தலைவர் என பலரும் சிறுமியை சீர ழித்த கொடூரம் நிகழ்த்தப்பட்டும் காவல்து றையும் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை  முறையாக விசாரிக்காமல் காவல்துறை அதி காரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். சிறு மியை சீரழித்த குற்றவாளிகள் அனைவரை யும் கைது செய்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரியும், குற்றவாளிகளை தப்பிக்க  வைக்கும் காவல்துறையை கண்டித்தும், இச்சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்தவர்களின் உயிருக்கும், சிறுமி மற்றும் குழந்தையின் உயிருக்கும் உரிய பாதுகாப்பு  அளித்திட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சி வட்ட செயலாளர் சி.மேகநாதன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறு ப்பினர்கள் பி.சீனிவாசன், எஸ்.துரைராஜ், சிங்காரவேலன், மாதர் சங்க மாநில துணை த்தலைவர் ஜி.கலைச்செல்வி, மாவட்ட க்குழு உறுப்பினர்கள் டி.கணேசன், டி.இரா சையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

;