பெர்ன்,ஆக.25- உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி ஆகஸ்ட் 25 ஞாயிறன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, ஜப்பான் நாட்டின் நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியது முதலே பி.வி. சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப் படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஒகுஹரா வால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 21-7 என பி.வி சிந்து எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் பி.வி.சிந்து அதே உத்வேகத்துடன் விளையாடி, 21-7 எனக் கைப்பற்றி தங்கம் வென்றார். பி.வி.சிந்து, உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முதலாக தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.