பெரம்பலூர், செப்.23- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் திங்களன்று நடைபெற்றது. அப்போது பெரம்பலூர் மாவட் டம் வேப்பந்தட்டை தாலுகா திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே திருமாந்துறை, எறையூர் சர்க்கரை ஆலை பெருமத்தூர், மிளகாநத்தம், பெண்ணகோணம், லெப்பைகுடிகாடு, அயன்பேரை யூர், கீரனூர் உள்ளிட்ட எட்டு கிரா மங்களைச் சேர்ந்த 500க்கும் மேற் பட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அம்மனுவில், விவசாயி களுக்கு சொந்தமான விளை நிலங் கள் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாக கூறி ஆந்திராவை சேர்ந்த ஜிவிகே குழுமமும் இந்திய பெரு வணிகத்துறை(டிட்கோ)யும் சேர்ந்து 2007 ஆம் ஆண்டு கைய கப்படுத்தினர். விவசாயிகள் தங்க ளது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி நிலம் தர மறுத்த போது நிலத்திற்குண்டான கிரயத் தொகை யுடன் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை யும் இலவச வீட்டுமனையும் தருவ தாக ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்து கொடுத்தனர்.
13 ஆண்டாகியும்...
இத்திட்டத்தினை 5 ஆண்டிற் குள் 827 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விமான உதிரிபாகங்கள் தயாரிக் கும் தொழிற்சாலை அமைத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கு வதாகவும் உறுதி அளித்திருந்தனர். மிகவும் பின்தங்கிய மாவட்ட மான பெரம்பலூரில் பொருளாதார மண்டல திட்டம் அமைக்கப்பட்டால் சிங்கப்பூர் போல தொழில் வளர்ந்த மாவட்டமாக மாறும் என உறுதி கூறினர். நிலம் கையகப்படுத்தி 13 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத் தில் 110 விதியின் கீழ் இத்திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக வந்த அம்மாவின் அரசு என தெரி வித்து ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசு இத்திட்டம் குறித்து கண்டு கொள்ளவே இல்லை. இந் நிலையில் நிலம் கொடுத்த விவசாயி கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டி ருக்கின்றனர். 3 ஆயிரம் ஏக்கர் நல்ல விளை நிலங்களும் கருவேலம் முள்முளைத்து தரிசாக கிடக்கிறது. எனவே தான், நிலம் கையகப் படுத்தும் சட்டம் 2013ன்படி எந்த திட்டத்திற்காக நிலம் கையகப் படுத்தப்பட்டதோ அத்திட்டம் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றா விட்டால் நிலத்தை விவசாயிகளி டமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற சட்ட விதிகளின்படி ஜிவிகே குழுமம் செயல்படவில்லை. எனவே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதர வோடு நிலம் கொடுத்த விவசாயி களுடன் இணைந்து 30.9.2019 அன்று நில மீட்பு போராட்டத்தின் மூலம் நிலத்தை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர்.