பெரம்பலூர், ஜூன் 9- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் வனப்பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட காப்புக் காடுகள் உள்ளன. இதில் மான்கள் மற்றும் காட்டு பன்றிகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் உள்ள மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வேட்டையாடப்பட்டு வரு கின்றன. இந்நிலையில் கை.களத்தூர் காவ லர்கள் இரவு ரோந்து பணியின் போது, வெண்பாவூருக்கும்- கிருஷ்ணாபுரத்திற் கும் இடையே ஒரு கும்பல் ஒரு மானை வேட்டையாடி வந்தனர். அவர்களை காவ லர்கள் மடக்கி பிடிக்க முயன்ற போது ஒருவர் சிக்கிக் கொண்டார். மற்ற 5 பேர் தப்பி ஓடி விட்டனர். அப்போது கழுத்து அறுபட்டு இறந்த நிலையில் ஒரு மான் மற்றும் 3 நாட்டு துப்பாக்கிகள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டு தப்பினர். சிக்கி கொண்டவரிடம் விசாரித்த போது, அவர், அன்னமங்கலத்தைச் சேர்ந்த மதலைமுத்து(54) என்பதும், அவருடன் மான் வேட்டையில் ஈடுபட்டது ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜோசப்(40), பெரிய வடகரை ஜமால்(30), வெண்பாவூர் தமிழ் (25), வெங்கலம் ரவி(30), அதே ஊரைச் சேர்ந்த மணி(30) என்பதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து இறந்த நிலையில் கிடந்த மான் மற்றும் 3 நாட்டு துப்பாக்கிகள், 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அவைகளை வேப்பந்தட்டை வன சரக அலுவலரிடம் ஒப்படைத்தனர். இத னைத் தொடர்ந்து வனச்சரக அலுவலர் குமார் மற்றும் வனத்துறையினர் வழக்கு பதிந்து மதலைமுத்துவை கைது செய்த னர். மேலும் தப்பி ஓடிய ஐந்து பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.