tamilnadu

img

கொரோனா பாதிப்பு... குன்னம் காவல்நிலையம் மூடல்.... 

பெரம்பலூர் 
பெரம்பலூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியான குன்னம் பகுதி தாலுகா அந்தஸ்தில் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், குன்னம் காவல்நிலையத்தில் பணியாற்றிய 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்காவல்நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் குன்னம் காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீசார்கள் மற்றும் காவல்நிலைய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   

;