tamilnadu

img

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

பெரம்பலூர், பிப்.16- பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழ கத்தின் 46-ம் ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா சங்கு பேட்டையில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் மணி, பொருளா ளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சுந்தர பாண்டியன் வரவேற்றார்.  மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, முன்னாள் மாநில தலைவர் நல்லுசாமி, முன்னாள் மாநில துணைத் தலை வர் தங்கராஜ், முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் சீனிவாசன், கவுரவ தலை வர் பாபுவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அச்சங் கத்தின் மாநில தலைவர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார்.  கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியள வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரி யர்களையும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற வர்களையும், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களையும் பாராட்டி பரிசு வழங்கி இன்னிசை வேந்தர் ரெ.வாசு கவுரவித்தார். இதில், மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

;