tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும் எனஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்விஎழுப்பியுள்ளது.

                              **************

திருவண்ணாமலை தீபத் திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோயில் நிர்வாகம்தான் முடிவெடுக்க முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

                              **************

இந்திய இராணுவ அதிகாரிகள் பெரியார் பல்கலைக்கழகத்தில்  முதுநிலை கல்வி பயிலப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட னர்.

                              **************

பெங்களூருவில் இன்று தொழில்நுட்ப உச்சி மாநாட்டைகாணொலிக் காட்சி மூலம்  பிரதமர்  மோடி தொடங்கி வைக்கிறார்.  ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஷன், சுவிஸ் துணை அதிபர் கய் பர்மலின் உட்பட சர்வதேச தலைவர்கள்  கலந்துகொள்கின்றனர்.

                              **************

பீமா-கொரேகான் வழக்கில் 2 ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள சமூக ஆர்வலர் வரவர ராவை நானாவதி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்துக்குத் தெரிவிக்காமல் சிறைக்கு மாற்றக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

                              **************

கிராமப்புற குடும்பங்கள் மற்றும் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக பசுமை எரிசக்திதிட்டம் முதன்முறையாக கோவாமாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளது.

                             **************

லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் அதிக அளவு சுமையை ஏற்றுவதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்என்று தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

                              **************

அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய மாணவா்களின் பங்களிப்பு 760 கோடி டாலா் (ரூ.57,000 கோடி) அளவுக்கு உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

                              **************

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்துள்ளதாக  ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

                              **************

சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து சென்ற இந்தியரை நான்கு ஆண்டுகள் தண்டனைக்குப் பிறகு இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களிடம் பாகிஸ்தான் அரசு ஒப்படைத்துள்ளது.

                              **************

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொழில் புரிவதற்காக நடத்தப்படும் தேர்வின் வினாத்தாள்களை மதிப்பீடுசெய்ய சுதந்திரமான நிபுணர் குழுவைஅமைக்கக் கோரி தாக்கல் செய்யப் பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                              **************

சமூகத்தில் பாதிப்புகளை ஏற் படுத்தக் கூடிய பதிவுகளை முன்னுரிமை அடிப்படையில் கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளதாக முகநூல் (ஃபேஸ்புக்) நிறு
வனம் தெரிவித்துள்ளது.

                              **************

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் விரிவான விசாரணை நடத்தப்படும்என்று ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தகவல் தெரிவித்துள்ளார். ரூ.280 கோடி நிதிமோசடி புகார் என்பதால் சூரப்பா மீது விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆடிட்டர் துணையுடன் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறினார்.