புதுச்சேரி, ஏப். 27- புதுச்சேரியில் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பி யுள்ளார். இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை 3ஆக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோய் கடும் அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி யில் துவக்கத்திலிருந்தே ஒற்றை கணக்கிலேயே நோயாளிகள் இருந்து வருகின்றனர்
புதுச்சேரியில் 8 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்திரா காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் 4 நோயாளி களில் ஒருவர் குணமடைந்து திங்களன்று (ஏப். 17) வீடு திரும்பியுள்ளார். மூலக்குளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த இந்த முதியவர் வீடு திரும்பியதை தொடர்ந்து தற்போது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவ தாக சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.