tamilnadu

img

ஊரடங்கை மீறி விழா நடத்திய கர்நாடக பாஜக அமைச்சர்...

பெங்களூரு
முகக் கவசம் அணியாவிட் டால், குறைந்தது ரூ. 100 முதல்500 வரை அபராதம் விதிக்கப்படும்; தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள், ஊரடங்கை மீறுபவர்கள் வழக்கு தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மத்திய பாஜக அரசு கூறிக் கொண்டிருக்கிறது.ஆனால், கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சரான ஸ்ரீராமுலு பங்கேற்ற விழாவில், பெருங்கூட்டமாக பாஜக-வினர் கலந்து கொண்டு, அனைத்து கட் டுப்பாடுகளையும் மீறியுள்ளனர்.கொரோனா தொற்றுக்கு ஆளாவோருக்கு சிறப்பாக சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர் களை கௌரவிக்கிறோம் என்ற பெயரில் விழாவை நடத்தி, அந்தவிழாவில்தான் விதிகளை மீறியுள்ளனர்.ஊரடங்கை மறந்துவிட்டு, ஆயிரக்கணக்கில் கூடியுள்ளனர். தனிமனித இடைவெளி, முகக்கவசம் எதையும் பின்பற்றவில்லை. இவ்வாறு ஒரு மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் பங்கேற்ற விழாவிலேயே கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் அப்பட்டமாக மீறப் பட்டு இருப்பதற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

;