tamilnadu

img

கொரோனா பீதி:  ஆர்எஸ்எஸ்  கூட்டம் ரத்து!

பெங்களூரு:
ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம்,கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மார்ச் 15 முதல்17-ஆம் தேதி வரை நடக் கும் என்று ஏற்கெனவே கூறப்பட்டு இருந்தது. இந்தக் கூட்டத்தில் 1500நிர்வாகிகள் வரை கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, கொரோனாவைரஸ் அச்சம் காரணமாக இந்தக் கூட்டம் ரத்துசெய்யப்படுவதாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி அறிவித்துள்ளார்.

;