tamilnadu

img

21 நாள் முடக்கத்தில் இந்திய மக்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பதை உறுதி செய்வீர்!

பிரதமர் நரேந்திரமோடிக்கு சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்

புதுதில்லி, மார்ச் 25- நாடு முடக்கப்பட்டுள்ள 21 நாட்களும் தேசத்தின் மக்கள் உயிருடனும், ஆரோக்கியத்து டனும் இருப்பதற்கு தேவையான அனைத்து நட வடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளு மாறு பிரதமர் நரேந்திரமோடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸை எதிர்கொள்ள 21 நாட்கள் ஒட்டுமொத்த நாடும் முற்றாக முடக்கப் படுகிறது என பிரதமர் நரேந்திரமோடி, செவ்வாயன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்க ளுக்கு உரையாற்றுகையில் அறிவித்தார். அந்த உரையின் போது பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது என அவர் அறிவித்தார். இந் நிலையில், செவ்வாயன்று நள்ளிரவு இது தொடர்பாக பிரதமருக்கு சீத்தாராம் யெச்சூரி ஒரு விரிவான கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

கோவிட் 19 என்கிற மிக பயங்கரமான தொற்று நோய் பரவியுள்ள சூழ்நிலையில், தங்களது நலனை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.  மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த ஆண்டில், நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய அவரது சூத்திரம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்: “நீங்கள் பார்த்திருக்கக் கூடிய ஒரு ஏழை, ஒரு நலிவுற்றவர் முகத்தை நினை வுக்கு கொண்டு வாருங்கள். நீங்கள் மேற் கொள்ளக் கூடிய ஒரு நடவடிக்கை எந்த வகை யிலாவது அவருக்கு உதவியாக இருக்குமா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்”. கொரோனா வைரஸை எதிர்கொள்ள நாடு முழுவதும் 21 நாட்கள் முற்றாக முடக்கம் செய்யப் படும் என்று தாங்கள் அறிவித்த பிரகடனத்தை கவனித்தோம்.

எந்தவிதமான நிவாரணமும் ஏழைகளுக்கு அறிவிக்காமல், அவர்களுக்குத் தேவையான நட வடிக்கைகளை உத்தரவாதமாக செய்வோம் என்று குறிப்பிடாமல், அவர்கள் இருபத்தொரு நாட்கள் இந்த நாடு மூடப்பட்டிருக்கும் கால கட்டத்தில் உயிரோடு வாழ்வதற்கான எந்தவித மான அவசர உதவியையும் அறிவிக்காமல் போய் விட்ட உங்களது பேச்சு பெருத்த ஏமாற்றத்தை எங்களுக்கு அளித்திருக்கிறது.

உங்களது உரையில், இத்தகைய நாடுதழு விய முடக்கத்தால் மிக மிக கடுமையாக பாதிக்கப் படப் போகிற, குறிப்பாக ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு வேலை தேடி வந்த கோடிக்க ணக்கான ஏழைகளின் வாழ்வுக்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் நீங்கள் அளிக்கவில்லை. அவர்கள் உணவையோ அல்லது 21 நாட்கள் தங்குவதற்கான இடத்தையோ உறுதி செய்யா மல், அதை பெறுவதற்காக அல்லது எங்கு கிடைக் கும் என்று தெரியாமல் திணறி இன்று இரவு முதல் செய்வதறியாது கையறு நிலையில் நிற்கப் போகிறார்கள். 

அவர்கள் எப்படி பாதுகாப்பான இடங்க ளுக்கு சென்று அடைவார்கள்? அவர்கள் எப்படி இருபத்தொரு நாட்கள் பணமில்லாமல் அல்லது உணவுப் பொருட்கள் இல்லாமல் அல்லது காவல்துறையின் அராஜகத்தை எதிர்கொண்டு உயிர் வாழ்வார்கள் என்று நம்புகிறீர்கள்? 

எந்தவிதமான உதவியும் இல்லை

அவர்கள் பாதுகாப்புக்காக ஓடத் துவங்கி இருக்கிறார்கள். யாரேனும் துரத்துவார்களோ, பிடித்து விடுவார்களோ, அடித்து விடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அவர்கள் ஓடத் துவங்கி இருக்கிறார்கள். அநேகமாக நள்ளிரவு முதல் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டு விடும். அவர்கள் தங்களது அடிப்படையான தேவை களை கூட பூர்த்தி செய்துகொள்வதற்கு வாய்ப்போ அல்லது பணமோ அல்லது எந்த விதமான உதவியும் அளிக்காமல் இந்த அறி விப்பை வெளியிட்டு இருக்கிறீர்கள்.

45 கோடி இந்தியர்களின் கதி

கிட்டத்தட்ட 45 கோடி இந்தியர்கள் அன்றாட கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கி றார்கள். இந்த நிலையில் 21 நாள் முடக்கம் கார ணமாக எல்லோருடைய வேலையும் பறிபோக இருக்கிறது. ஏற்கனவே துயரத்தின் உச்சத்தில் சிக்கியுள்ள அவர்களது வாழ்க்கை எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் நிர்க்கதியாக விடப் பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வே துயரின் பிடியில் சிக்கியிருக்கிறது. அவர்களது கூலிக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது. நாடு முழுவதும் நோய் பதற்றம் ஏற்பட்டு இருக்கிற நிலையில் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லா மல் அவர்கள் விடப்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடுகிற சமூக தனிமைப்படுத்தல் என்பதன் அடிப்படையான நோக்கத்திற்கு எதிராக இந்த நட வடிக்கைகள் எல்லாம் அமைந்துள்ளன.

உங்களது உரையில் சுகாதார நடவடிக்கை களுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினீர்கள். அது எங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் அடிக்கடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளா தாரம் பற்றி பேசிக் கொண்டிருப்பவர். அடிக்கடி பொருளாதாரத்தில் உச்ச கட்டத்தை எட்டப் போவ தாக பேசிக் கொண்டிருப்பவர். ஆனால் வெறும் 15 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே உங்களால் ஒதுக்க முடிந்திருக்கிறது. இந்தத் தொகை எந்த அளவிற்கு மிக மிக குறைவானது தெரியுமா?

ஏழைக்கு ரூ.112- பணக்காரர்களுக்கு ரூ. 7.78 லட்சம் கோடி 

ஒரு குடிமகனுக்கு வெறும் 112 ரூபாயைத் தான் நீங்கள் ஒதுக்கி இருக்கிறீர்கள். ஆனால் மிகப்பெரிய பணக்கார கார்ப்பரேட்டுகளுக்கு நீங்கள் எவ்வளவு ஒதுக்கி இருக்கிறீர்கள் தெரி யுமா? அவர்களை நெருக்கடியிலிருந்து மீட்ப தற்காக என்ற பெயரில் கிட்டத்தட்ட 7.78 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறீர்கள்.  இன்னும் சொல்வதானால் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகை மட்டும் அளித்து இருக்கிறீர்கள்.

ஆனால் மிக மிக பயங்கரமான ஆபத்தான நோய் சூழலில் சிக்கியிருக்கிற இந்திய மக்களின் சுகாதாரத்திற்காக உண்மையில் இதைவிட மிக அதிகமாக அல்லவா செலவழித்து இருக்க வேண்டும்?  ஏன் நீங்கள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை யை பாதுகாப்பதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் பொருட்டு மிகப் பெரும் பணக் காரர்கள் மீது வரி விதித்து அந்த பணத்தை கையகப்படுத்தக் கூடாது என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.

பட்ஜெட்டில் கடும் வெட்டு

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூட நாம் எச்சரிக்கப்பட்டோம். உலக அள வில் கொரோனா பாதிப்பு என்பது தீவிரமாகப் போகிறது என்பது கண் முன்னால் தெரிந்தது. ஆனாலும் கூட உங்களது அரசாங்கம் தேசிய சுகா தாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாகவே குறைத்தது. குறிப்பாக நாட்டின் மிக முக்கிய பெரிய மருத்துவமனைகளுக்கான நிதி ஒதுக்கீடு கள் வெட்டப்பட்டன. தில்லியில் இருக்கிற மிகப் பெரிய எய்ம்ஸ் மருத்துவமனை கூட வெறும் 0.1 சதவீதம் அளவிற்குத்தான் சற்று கூடுதல் நிதியை பெற முடிந்தது.

இன்னும் குறிப்பாக ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீம யோஜனா என்ற தேசிய சுகாதார திட்டத்திற்கு பொது நிதி ஒதுக்கீடு 156 கோடி ரூபாயிலிருந்து வெறும் 29 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. அதேபோல ஆயுஸ்மான் பாரத் திட்டத்திற்கு ஏற்க னவே ஒதுக்கீடு செய்தது போல 6,400 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. நியா யமாக அது அதிகரிக்கப்பட்டு இருக்கவேண்டும். அதேபோல உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நிதி ஒதுக்கீடு என்பது 360 கோடி ரூபாயிலிருந்து 283. 71கோடி ரூபா யாக குறைக்கப்பட்டது.

இன்னும் அதிர்ச்சிகரமான முறையில், எளி தில் தொற்றக்கூடிய எளிதில் கண்டறிய கூடிய நோய்களுக்கான சுகாதார நடவடிக்கைகளுக் கான நிதி ஒதுக்கீடு என்பது எந்த விதத்திலும் அதிகரிக்கப்படாமல் 2178 கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது. உண்மையைச் சொல்வதானால் உங்களது அரசாங்கம் இந்தியாவின் சுகாதார செல வினங்கள் மீது கிரிமினல் தனமான வெட்டுக்களை கடுமையான முறையில் அரங்கேற்றியது. இது இன்றைக்கு இந்தியாவை மிகப் பெரும் ஆபத் தின் பிடியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.  உலக அளவில் கொரோனா நோய் பரவத் துவங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாத காலம் இந்தியாவுக்கு அவகாசம் கிடைத்தது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

வெண்டிலேட்டரை கூட வாங்காத அரசு

தொற்று உள்ளதா என பரிசோதனை செய்வ தற்கான கருவிகளைக் கூட குறைந்த விலையில் நாடு முழுவதும் சப்ளை செய்ய முடியவில்லை. பரிசோதனை கருவிகள் மட்டுமல்ல, அதற்கான நடைமுறைகள் அல்லது முகக் கவசம் மற்றும் வெண்டிலேட்டர்களை வாங்க வேண்டியதன் அவசியத்தைக் கூட அரசு உணர்ந்திருக்க வில்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய தாகும். மார்ச் 24ஆம் தேதி வரையிலும் இத்த கைய மிக முக்கியமான கருவிகள் நமக்கு தேவை என்பதைக் கூட உணராமல், அவை ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கூட நிறுத்தாமல் எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்கா மல் உங்களது அரசாங்கம் அலட்சியம் செய்து இருக்கிறது என்பது மிகமிக அதிர்ச்சி தரத்தக்க உண்மையாகும்.

உங்கள் கட்சி என்ன செய்கிறது?

உங்களது உரையில் மாநில அரசுகள் முழுக்க முழுக்க சுகாதார நடவடிக்கைகளில் மட்டுமே அதிகபட்ச கவனத்தை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறீர்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு பதற்றமான தருணத்தில் உங்க ளது கட்சியான பாரதிய ஜனதா கட்சி இதை யெல்லாம் மறந்து, மத்தியப் பிரதேசத்தில் மக்க ளால் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு மாநில அரசாங்கத்தை நிலைகுலையச் செய்து, கவிழ்த்து இருக்கிற ஒரு வேலையைத் தான் செய்து கொண்டிருந்தது. இந்தியாவின் நாடாளுமன்றமும், நீங்கள் என்ன தேவை என்று கருதுகிறீர்களோ அந்த சட்டத்தை நிறைவேற்று வதற்காகத்தான் செயல்பட்டுக் கொண்டி ருந்தது.

கேரளமும், பிற மாநிலங்களும்

ஆனால் மறுபுறத்தில் கேரளாவில் ஆட்சி நடத்தும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்க மும் நாட்டில் எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் வேறுசில மாநிலங்களும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பல பணிகளை செய்திருக்கின்றன. குறிப் பாக பாதித்தவர்களை பரிசோதிப்பது, அவர் களோடு யாரெல்லாம் தொடர்பில் இருந்தார் களோ அவர்களைத் தேடிக் கண்டறிந்து பரிசோத னைக்கு உள்ளாக்குவது, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது, அதற்கு மிக அதிகபட்சமான முக்கியத்துவம் தருவது என்கிற முறையில் மட்டும் அல்லாமல், இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்ற பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உரிய பொருத்தமான பொரு ளாதார உதவிகளை அறிவித்திருப்பது என்ற முறையில் மிகச் சிறந்த பணியாற்றி இருக்கின் றன. இவை எதையும் நீங்கள் குறிப்பிடவும் அங்கீ கரிக்கவும் செய்யவில்லை. 

அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை, அவர்களது உணர்வுப்பூர்வமான பங்களிப்பை, அவர்களது சக்தியை, அவர்களது நிர்வாகத் திறமையை நீங்கள் ஒரு துளி அளவு கூட அங்கீ கரிக்கவில்லை.

இந்த மிக மிகக் கடினமான தருணத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் அதிகபட்ச கவனத்தைச் செலுத்த வேண்டிய கடமையில் இருக்கிறீர்கள். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் மிகத்தெளிவான நடவடிக்கைகளை அறி விக்க வேண்டும். இந்த கடுமையான தருணத்தில் இருபத்தொரு நாட்கள் நாடே மூடப்படுகிற சூழ லில் பொருளாதார உதவிகளைப் பற்றியும் அதே போல பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பரி சோதனை, அவர்களோடு தொடர்பில் இருந்த வர்களை தேடிக் கண்டறிந்து அவர்களுக்கான சோதனை, பொது சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான மிகச்சிறந்த நட வடிக்கைகள் ஆகிய இரண்டு முனைகளிலும் நீங்கள் சரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இரண்டுமே மிக முக்கியமானவை. இவையிரண்டும் தாமதப்படுத்தாமல் செய் யப்பட்டால் தான் மிகப் பெரும் கொள்ளை நோயை நாம் தோற்கடிக்க முடியும். கொரோனா நோய்க்கு எதிரான இந்த மாபெரும் போராட்டத் தில் இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்கிறோம்.

அனைத்தையும் குடிமக்கள் பக்கம் தள்ளி விடுகிறீர்கள்

ஆனால் உங்களது அரசாங்கம் அனைத்தை யுமே குடிமக்கள் பக்கம் தள்ளி விடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, குடிமக்களை அனைத்து துன்பங்களை ஏற்றுக் கொள்ளுமாறு நீங்கள் கேட்டுக் கொள்கிறீர்கள். ஆனால் கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரங்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று எந்தவிதமான உறுதி மொழியையும் அளிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. எனவே இந்திய தேசத்து மக்கள் உயிரோடு இருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்  இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார்.