tamilnadu

img

பணியிட மாற்றம்: முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்

சென்னை, ஏப்.5- போராட்டத்தில் ஈடுபட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அரசு மருத்து வர்கள், மீண்டும் பழைய இடங்களுக்கு மாற்றம் செய்தால் கொரோனா தொற்று தடுப்பு பணியில் உத்வேகத்துடன் செயல்ப டுவோம் என்று முதல்வர் எடப்பாடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 118  அரசு மருத்துவர்கள் பல்வேறு மாவட்டங்க ளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்கே மாற்றம் செய்யும்படி முதல்வருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

நியாயமான கோரிக்கைகளுக்கான அரசு மருத்துவர்கள் போராட்டம் தீவிர மடைந்த நிலையில், போராடிய மருத்து வர்கள் மீதும், போராட்டத்தை முன்னெ டுத்தவர்கள் மீதும் துறை ரீதியான நட வடிக்கைகள் பாய்ந்தன. போராட்டத்தை நிபந்தனையின்றி கைவிட்டு பணிக்கு திரும்பினால் அரசு மருத்துவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் ரத்து  செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்த தன் பேரில், போராட்டத்தை கைவிடப்பட்டு  பணிக்கு திரும்பினோம்.  ஆனால் 15,000 மருத்துவர்கள் பங்கேற்ற போராட்டத்தில் 118 அரசு மருத்துவர்கள் (ஆரம்ப சுகாதார  நிலையை மருத்துவர்கள், உதவி பேராசிரி யர்கள், பெண் மருத்துவ வல்லுநர்கள்) தொலைதூரம் 350 முதல் 700 கிலொ மீட்ட ருக்கு அப்பால் தண்டனை பணியிட மாற்றம் செய்யப்பட்டு கடந்த 5 மாதங்க ளாக குடும்பம், குழந்தைகளை பிரிந்து கடும் மன உளைச்சலில் பணிபுரிந்து வருகிறோம்.

இத்தகைய சூழலில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் சூழலில் ஆயுள்தண்டனை கைதிகளை தமிழக அரசு  மனிதாபிமான அடிப்படையில் விடுதலை  செய்ததை போல், புதிதாக 500 மருத்து வர்கள் பணி நியமனம் செய்யயப்படுவ தற்கு முன்பாக தண்டனை பணியிட மாற்றத்தால் உணவு, இருப்பிடம் மற்றும்  தொலைதூர பயணங்களால் அல்லல்ப டும் எங்களின் உடல் நலம் மற்றும் மன நலன் கருதி சொந்த மாவட்டத்தில் பழைய  பணியிடத்திற்கே மீள்பணியமர்த்தினால் நாங்கள் மிகுந்த உத்வேகத்துடனும், உற்சா கத்துடனும் கொரோனா தடுப்பு பணியில் நிச்சயம் அரசுக்கு கைகொடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.