புதுதில்லி:
41 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடப்போவதாக கடந்த 2020 ஜூன் 18 அன்றுபிரதமர் மோடி அறிவித்தார். அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.இந்த நிலக்கரிச் சுரங்கங்களுக் காக காடுகள் அழிக்கப்படும்; பழங் குடி மக்கள் வனங்களிலிருந்து விரட்டி அடிக்கப்படுவார்கள்; சுற்றுச்சூழல் பேரழிவைச் சந்திக்கும் என்று பலரும் குரல் எழுப்பினர்.ஆனால், 41 நிலக்கரிச் சுரங்கங் களை ஏலம் விடுவதன் முலம் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது; அரசுக்கும் ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம்கோடி டாலர் வருவாய் வரப்போகிறது என்று பிரதமர் மோடி புள்ளிவிவரங்களை அள்ளிவீசினார். வளர்ச்சி என்ற பசப்பான வார்த்தையைக் கூறி, எதிர்க்கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றவர்களின் கருத்தை அமுக்க முயன்றார்.
ஆனால், பிரதமர் மோடி கூறியபுள்ளிவிவரங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. மக்களை ஏமாற்றுவதற் காக அள்ளிவிடப்பட்டவை என்றுஆர்டிஐ தரவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது.எரிசக்தி ஆராய்ச்சியாளரும் சமூக ஆர்வலருமான சந்தீப் பாய்மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்திற்கு தகவலறியும் உரிமை சட் டத்தின் (Right to Information Act- 2005) கீழ் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.“41 நிலக்கரி சுரங்க ஏலம் மூலம்,ரூ.20 ஆயிரம் கோடி டாலர் அரசுக்குஆண்டு வருமானமாக கிடைக்கும்; 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதுஎந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது? இதுதொடர் பாக மாநில அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை / ஆய்வு / கணக் கெடுப்பு / வெள்ளை அறிக்கை / ஆலோசனை அறிக்கை / கணக்கீடுஅல்லது பிரதமர் மோடி கூறும் புள்ளிவிவரங்களுக்கான ஆதாரம் என்ன?
அதுதொடர்பான ஆவண நகல் களைத் தனக்குத் தரவேண்டும்” என்று அந்த மனுவில் அவர் கேட்டிருந்தார்.இதற்கு நிலக்கரித் துறை அமைச்சகம் தற்போது பதிலளித்துள்ளது. அதில், “இந்த திட்டத்தை செயல் படுத்தும் முன் நடத்திய, கள ஆய்வுகள், திட்ட அறிக்கை, ஆலோசகர்கள் வழங்கிய குறிப்புகள், திட்ட வரவு- செலவு கணக்கு போன்ற எதுவுமே தங்களிடம் இல்லை” என்று ஒரேயடியாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளது. அதாவது எந்தவித அடிப் படை ஆதாரமும் இல்லாமல்தான் பிரதமர் மோடி வாய்க்கு வந்தபடி அளந்து விட்டிருக்கிறார் என்பதை கூறாமல் கூறியுள்ளது.
நிலக்கரித்துறை அமைச்சகத்தின் இந்த பதிலை, சமூக ஆர்வலர் சந்தீப் பாய் தனது டுவிட்டர்பக்கத்தில் தற்போது வெளியிட்டு, மோடி அரசின் நிர்வாக லட்சணத்தைகடுமையாக விமர்சித்துள்ளார்.சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் போன்ற சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட் டத்திற்கு எந்தவித அறிவியல் பூர்வமான ஆய்வுப் பணிகளையும் மேற் கொள்ளாமல் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் மனத்திற்குத் தோன்றியதை எல்லாம் ‘திட்டம்’ என்ற பெயரில் மேடைபோட்டு முழங்கி, மக்களை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்? என்று மீண்டும் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.