பி.ஆர். நடராஜன் கேள்வி
புதுதில்லி, நவ.28- கும்பல் படுகொலையை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்வி க்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்து ள்ளார்.
சமீபத்தில் மாட்டிறைச்சி வைத்திருக்கிறார்கள் என்ற சந்தே கத்தின் பேரில் கும்பல் கொலை செய்யப்பட்டவர்களின் விவ ரங்கள், வருடம் மற்றும் மாநிலங்கள் வாரியாக வேண்டும். கடந்த மூன் றாண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டு களாக கும்பல் படுகொலை குறித்த பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அகற்றப்பட்ட வழக்குகள், சம்பந் தப்பட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றிய விவரங்கள் மற்றும் கும்பல் கொலைகள் நடப்பதைத் தடுக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் அளித்த பதில் பின்வருமாறு.:
“போலீஸ்” மற்றும் “பொது ஒழுங்கு” ஆகியவை இந்திய அரசியலமைப்பின் அட்டவணை 7ன் படி மாநில அரசு சம்பந்தப் பட்டவை. மேலும் குற்றத் தடுப்பு, குற்றங்களை கண்டறி தல், பதிவு செய்தல், குற்ற விசாரணை, மாநில அரசின் சட்ட அமலாக்க முகவர் அமைப்பு மூலம் குற்றவாளிகளை விசாரணை செய்தல் ஆகிய வற்றிற்கு மாநில அரசுகளே பொறுப்பானவை. தேசிய குற்ற பதிவு பணியகம் கும்பல் கொலை கள் தொடர்பாக எந்த தரவையும் பராமரிக்கவில்லை.
எவ்வாறாயினும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற் கும், எந்தவொரு தனி நபரும் சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொள்வாரேயானால் அவர்களை சட்டப்படி உடனடியாக தண்டிப்பதை உறுதி செய்வதற் கும், அவ்வப்போது, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, உள் துறை அமைச்சகம் ஆலோச னைகளை வழங்கியுள்ளது. 04.07.18 தேதியிட்ட மத்திய அரசின் ஆலோசனை கடிதத்தில் வன்முறைத் தூண்டுதலுக்கான சாத்தியக்கூறுகள் கொண்ட போ லிச் செய்திகள் மற்றும் வதந்திக ளைப் பரப்புவதைக் கண்காணிக் கவும், அவற்றை திறம்பட எதிர் கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் நபர்களை உறுதியாகக் கையாளவும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பசுவைப் பாதுகாத்தல் என்ற பெயரில் சட்டத்தை தங்கள் கைக ளில் எடுத்துக் கொள்ளும் குற்ற வாளிகள் மீது உடனடி மற்றும் கடு மையான நடவடிக்கை எடுப்பதற் காக அனைத்து மாநிலங்களுக் கும் யூனியன் பிரதேசங்களுக் கும் 9.8.16 அன்று ஒரு ஆலோ சனை வழங்கியுள்ளது. மேலும், 23.7.18 மற்றும் 25.9.18 தேதி யிட்ட மத்திய அரசின் ஆலோச னைகள் நாட்டில் கும்பல் கொலை சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற் காக மாநில அரசுகள் மற்றும் யூனி யன் பிரதேச நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆடியோ காட்சி ஊடகங்கள் மூலம், கும்பல் கொலை செய்வதைத் தடுக்க அரசாங்கம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள் ளது. மேலும், கும்பல் வன்முறை மற்றும் கொடூரத்தைத் தூண்டும் திறன் கொண்ட தவறான செய்தி கள் மற்றும் வதந்திகளின் பிரச்சா ரத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுப்பது பற்றியும் சேவை வழங்கு நர்களுக்கும் அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.