மும்பை, நவ.30- மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சனிக்கிழ மையன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெ டுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற் றுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும் பான்மை இல்லாததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது. ஆட்சியமைக்க முடியாத ஆத்திரத்தில் மத்திய பாஜக அரசு மகா ராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்தது. இந்நிலையில் சிவசேனா, காங்கி ரஸ்,தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சி கள் இணைந்து ஆட்சியமைப்பதற்காக ஆளு நரை சந்திக்கவிருந்த நிலையில், இரவோடு இரவாக குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய் யப்பட்டு, பாஜகவின் பட்னாவிசை ஆட்சி யமைக்க அழைத்தார் மாநில ஆளுநர். பாஜக வின் பட்னாவிஸ் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆகியோருக்கு முதல்வர், துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்புக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மகாராஷ்டிர சட்ட மன்றத்தில் நவம்பர் 27 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலை யில் துணை முதலமைச்சர் பதவியிலிருந்து அஜித் பவார் விலகினார். அதனால் தேவேந் திர பட்னாவிசும், முதலமைச்சர் பதவியிலி ருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து சிவசேனா,தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா ராஷ்டிரா வளர்ச்சி முன்னணி ஆட்சியமைக் கும் உரிமை கோரியது. 166 எம்எல்ஏக்கள் பட்டியல் தரப்பட்டது. இதையடுத்து நவம்பர் 29 அன்று உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றுகொண்டார். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் மகாராஷ்டிரா சட்ட மன்றத்தில் சனிக்கிழமையன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளி யில் ஈடுபட்டன. பின்னர் அவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். 288 உறுப்பினர்களை கொண்ட சட்ட மன்றத்தில் அரசு வெற்றி பெற 145 எம்.எல்.ஏ. க்கள் தேவை என்ற நிலையில், 169 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றுள்ளது.