tamilnadu

img

உ.பி எம்எல்ஏ மற்றும் அவர் மகன் மீது பாடகி பாலியல் புகார்

உத்தரபிரதேச மாநில எம்எல்ஏ மற்றும் அவர் மகன் உள்ளிட்ட 3 பேர் மீது பாடகி பாலியல் புகார் அளித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநில நிஷாத் கட்சியின் எம்எல்ஏவிஜய் மிஷ்ரா. இவர் கடந்த 2014ம் ஆண்டு தனது வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு பாடகி ஒருவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாடகியை மிஸ்ரா அவரது மகன் உள்ளிட்ட 3 பேர் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பாடகி கோபிகஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் 3 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, எம்.எல்.ஏ. மிஷ்ரா தனது பிரயாக்ராஜ் இல்லத்தில் வைத்து பாடகியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  பின்பு வாரணாசியில் உள்ள ஓட்டல் ஒன்றிலும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவர் வீடியோ கால் வழியே பாடகியை அழைத்து, ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.  அதற்கான சான்றுகளை பாடகி எங்களிடம் அளித்து உள்ளார் என்று கூறியுள்ளார்.