மேற்கு வங்கத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியை திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவரால் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தின் ஃபத்தா நகரில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதே பகுதி சேர்ந்த ஆசிரியை ஸ்மிரிகோனா தாஸ் வீட்டு முன் அமைக்கப்படும் சாலை 12 அடி அகலமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதற்காக அவர் நிலத்தை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பஞ்சாயத்து சாலையை 24 அடிக்கு அகலப்படுத்த முடிவு செய்தபோது அதற்கு ஸ்மிரிகோனா எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் அமல் சர்கார் என்பவர் தலைமையிலான ஆண்கள் கும்பல் ஸ்மிருதிகோனா தாசை முழங்காலில் கயிறை கட்டி ரோட்டில் தரதரவென இழுத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது சகோதரி சோமா தாசை அந்த கும்பல் தரதரவென இழுத்து சென்றது.
இது குறித்து ஸ்மிருதிகோனா போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்த சம்பவத்தில் இது வரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.
தற்போது இரண்டு பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.