tamilnadu

img

கொரோனா தொற்றை மதிப்பிட இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வு

புதுதில்லி:
கொரோனா நோய்த்தொற்று இருப்பதை மதிப்பிடுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கணக்கெடுப்பை நடத்துகிறது.இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இந்திய மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை மதிப்பிடுவதற்காக மக்கள் தொகை அடிப்படையிலான செரோ கணக்கெடுப்பை நடத்தி வருவதாக மருத்துவஅமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

“ஐ.சி.எம்.ஆர், புதுதில்லி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய அரசு மற்றும் நோய்களுக்கான தேசிய மையம், மாநில சுகாதாரத் துறைகள், உல சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா ஒரு சமூக அடிப்படையிலான செரோ-கணக்கெடுப்பை நடத்துகிறது.21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்படும் என்று சுகாதார ஆராய்ச்சி அமைப்பு  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளமாநிலங்களில் மகாராஷ்டிரா, இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்குவங்கம், அசாம் மற்றும் பீகார் ஆகியவை அடங்கும்.கொரோனா தொற்று பரவலின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில்  வகைப் படுத்தப்பட்ட நான்கு மாவட்டங்களில் 24,000 பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.முக்கியமாக கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுவாசநோயின் சமூகப் பரவுதல் இருந்ததா என்பதைஅறிய இந்த ஆய்வு உதவிசெய்யும் என நம்பப்படுகிறது.

ஐ.சி.எம்.ஆரின் தேசிய தொற்றுநோயி யல் நிறுவனம் (என்.ஐ.இ) மற்றும் சென்னையின் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.ஆர்.டி) ஆகியவை இந்த ஆய்வை ஒருங்கிணைக்கின்றன.

;