புதுதில்லி, ஆக.29- வரும் செப்டம்பர் 14 அன்று தொடங்கவிருக்கும் நாடா ளுமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி நேரமும், அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்ய நேரமும் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய முக்கியத்துவம் மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பித் தீர்வு காண்பதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தவை கேள்வி நேரமும், பூஜ்ய நேரமும் ஆகும். இவை ஒழித்துக்கட்டப்பட்டுள்ள நிலையில், நாடாளு மன்றத்திற்கு வரும் உறுப்பினர்களுக்கு அநேகமாக சட்ட முன்வடிவுகளின் மீது நடைபெறும் விவாதங்கள் முடிந்த பின் அதற்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் வேலை யைத் தவிர வேறெதுவும் கிடையாது. விவாதங்களில் கட்சி யின் முக்கிய தலைவர்கள் மட்டுமே பேசுவார்கள். மற்ற உறுப்பினர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. எனவே இவ்வாறு கேள்வி நேரத்தையும், பூஜ்ய நேரத் தையும் ஒழித்துக்கட்டியிருப்பதை மறு பரிசீலனை செய்திட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் அதிர் ரஞ்சன் சௌத்ரி கடிதம் எழுதியிருக்கிறார். (ந.நி.)