tamilnadu

img

திறந்தவெளி சிறைச்சாலையானது ஜம்மு -காஷ்மீர்

புதுதில்லி, ஆக. 6 - 370வது பிரிவை ரத்து செய்து, ஒட்டுமொத்தமாக ராணுவப் படைகளின் பிடியில் கொண்டு வரப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலமே ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுவிட்டது என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி சாடினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்குவதற்கான தீர்மானம் மற்றும் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக உடைக்கும் “ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா 2019” ஆகியவை மக்களவையிலும் தாக்கல் செய்யப் பட்ட நிலையில் அதன் மீதான விவா தம் செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது, காஷ்மீர் விவ காரத்தில் உரிய விளக்கத்தை உள்துறை  அமைச்சர் அமித்ஷா வழங்க வேண்டும் என்று மக்களவையின் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உட்பட காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிடத் தொடங்கினர். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பிரச்சனையாக காஷ்மீர் இருக்கிறதா என விளக்கமளிக்க வேண்டும் எனவும், ஜம்மு - காஷ்மீர் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுவிட்டதாகவும் காங் கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி சாடினார்.

அதற்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதியாக இருக்கிறது. இதில் எந்தவொரு சட்ட ரீதியான, அரசியலமைப்பு ரீதியான சர்ச்சையும் இருக்க முடியாது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று ஜம்மு - காஷ்மீரே அறிவித்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உரிய சட்டத்தை நிறைவேற்ற இதுதான் தகுந்த சமயம்” என்று பேசியவுடன் எதிர்க்கட்சியினர் தங்களது எதிர்ப்பு களைத் தெரிவிக்கத் தொடங்கினர். எதிர்க்கட்சி எம்பிக்கள் 370 சட்டப் பிரிவு குறித்த தங்களது வாதங் களை முன்வைக்கலாம் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி னார். தொடர்ந்து பேசிய அமித்  ஷா, “ஜம்மு - காஷ்மீர் இந்தியா வுடனேயே இருக்க இந்த மசோதா வும் தீர்மானமும் உறுதியளிக்கிறது. லடாக் பகுதியை யூனியன் பிரதேச மாக மாற்ற வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். சீனா - இந்தியா எல்லையில் உள்ள அக்‌ஷாய் சின் பகுதியும் லடாக் யூனியன் பிர தேசத்தின் அங்கமாகவே இருக்கும்.” என்றார். இது ஒரு உள்நாட்டு விவகா ரம் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அதிர் ரஞ்சன்  சவுத்ரி, “இது ஒரு உள்நாட்டு விவ காரம் என்கிறீர்கள். 1948 முதலே ஐக்கிய நாடுகள் சபையால் இந்த விவகாரம் கண்காணிக்கப்பட்டு வரு கிறது. அப்படியிருக்க இது ஒரு உள்நாட்டு விவகாரமா? சிம்லா ஒப்பந்தத்திலும் லாகூர் ஒப்பந்தத் திலும் நாம் கையெழுத்திட்டோம். அது உள்நாட்டு விவகாரமா அல்லது இருதரப்பு விவகாரமா?” என்று அமித் ஷாவிடம் கேள்வியெழுப்பினார். காஷ்மீர் - பாகிஸ்தான் விவகாரம் இருதரப்பு சார்ந்தது என்பதால் அமெரிக்காவின் மத்தியஸ்தம் வேண்டாம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் கூறி யதைச் சுட்டிக்காட்டிய அதிர் ரஞ்சன் சவுத்ரி, இப்போது மட்டும் ஜம்மு -காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரமாகி விட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.

அறிவிக்கப்படாத அவசர நிலை: டி.ஆர்.பாலு

பின்னரும் மக்களவையில் அமித் ஷா பேசினார். இதைத்தொடர்ந்து மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை பேச அழைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. “தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவி வருகிறது என்று நான் நினைக்கிறேன்” என்று மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.பாலு பேசத் தொடங்கியதுமே பாஜக உறுப்பினர்கள்அவரை பேசவிடாமல் தொடர்ந்து சப்தமிட்டுக்கொண்டே இருந்தனர். அதனைப் பொருட்படுத்தாமல் பேசிய டி.ஆர்.பாலு, “என்னுடைய சக மக்களவை எம்.பி பரூக் அப்துல்லா எங்கிருக்கிறார்? அவர் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளாரா அல்லது கைது செய்யப் பட்டுள்ளாரா என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. இதுபோல் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகி யோர் எங்கிருக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அவ ருக்கு தொடர்ந்து பேச அனுமதி மறுத்த சபாநாயகர், இருக்கை யில் அமரச் சொன்னார். விவா தத்தின்போது வாய்ப்பு வழங்குவ தாகவும் கூறினார்.

விவாதத்தின் மீது பேசிய டி.ஆர்.பாலு, “370ஆவது சட்டப் பிரிவு  தற்காலிக தீர்வல்ல, அது நிரந்தர தீர்வு. நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பதற்கு முன்பே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது ஏன்? ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதி இன்னும் எதிரிகளின் கை களில் இருக்கிறது. காஷ்மீரில் சட்ட மன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அங்கு தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். காஷ்மீர் மக்களின்  மனநிலையை பிரதிபலிக்கக் கூடி யவர்கள் காஷ்மீர் சட்டமன்றத் தில்தான் உள்ளனர். பெரும்பான்மை இருக்கும் ஒரே காரணத்தால் அனைத்து மசோதாக்களையும் நிறை வேற்றுகிறீர்கள்” என்று குற்றம் சாட்டினார். விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.எம்.ஆரிப், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.செல்வராசு உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து விவாதம் நடை பெற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. 351 வாக்குகள் ஆதரவாகவும், 71 வாக்குகள் எதிராகவும் பதிவா கின. தீர்மானமும் மசோதாவும் நிறை வேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு

இந்நிலையில் செவ்வாயன்று மாலை 17வது மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்திய அரசின் இலக்குகளில் 99சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், எனவே அவையை ஒத்திவைக்கலாம் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லாவை நாடாளுமன்ற அலுவல் அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று, மக்களவை யை காலவரையின்றி சபாநாயகர் ஒத்தி வைத்தார்.  17வது மக்களவை யின் முதல் தொடரான பட்ஜெட் தொடர் ஜூன் 17 அன்று துவங்கியது. ஜூலை 26 அன்று முடிந்திருக்க வேண்டிய இக்கூட்டத் தொடரை ஆகஸ்ட் 7 வரை மத்திய அரசு நீட்டித்தது. முற்றிலும் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேசவிரோத அராஜக மசோதாக்களையும் அறிவிப்புகளையும் வெளியிடு வதற்காகவும் நிறைவேற்றுவத ற்காகவும் இந்தத் தொடரை மோடி அரசு பயன்படுத்திக் கொண்டது. 

(பிடிஐ செய்திகளுடன்)