tamilnadu

img

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டையால் பாதிப்பே இல்லையாம்: அமைச்சர்

சென்னை, செப். 13- ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களுடனான மாநில கலந்தாய்வுக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும் போது எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித நடைமுறை சிக்கலும் இல்லை. இதன் மூலம் மாநில அரசுக்கு நிதிச்சுமையும் ஏற்படாது” என்றார். வெளி மாநிலத்தவருக்கு அரிசி மற்றும் கோதுமை ஆகிய இரு பொருட்கள் மட்டுமே தேசிய உணவு கொள்கையின் கீழ் வழங்கப்படும். மேலும் அந்த உணவுப் பொருட்களை மத்திய அரசிடம் முழுமையாக பெற்று வழங்குவதால் மாநில அரசுக்கு எந்த ஒரு நிதிச் சுமையும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

;