tamilnadu

img

பாஜகவை ஒதுக்கித் தள்ளிய நாகா மக்கள் முன்னணி

கோஹிமா, ஏப். 10 -நாகாலாந்து மாநிலத்தின் பெரிய கட்சியான நாகாலாந்து மக்கள் முன்னணி (சூஞகு), பாஜக-வை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு உருவான, நாகா மக்கள் முன்னணி, பாஜக-வையே ஆதரித்து வந்தது. ஆனால், தற்போது அந்த நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. வாஜ்பாய் காலத்திலிருந்த பாஜக, பாதை மாறி, தற்போது வகுப்புவாதக் கட்சியாக மாறிவிட்டதாக, நாகா மக்கள் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் 2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எல். சிஷியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.அதேநேரம் சொந்த கட்சி தொடங்கியுள்ள அம்மாநில முதல்வர் நெய்பூ ரியோ, பாஜக-வுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

;