tamilnadu

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட எதிரொலி: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்-அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என தங்கள் நாட்டு மக்களுக்கு  அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற முயலும் வகையிலும் இஸ்லாமியர்களை மத ரீதியில் மக்களை  பிளவுபடுத்தும் வகையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.   பாஜக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை எதிர்த்து அசாம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்களும் மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அசாமில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.  அசாமின் 10 மாவட்டங்களில் கால வரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டு, ராணுவத்தினர் குவிக்கப் பட்டுள்ளனர். வரும் டிசம்பர் 22 ம் தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்
கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு கண்ணீர் புகைகுண்டு தாக்குதலையும் மீறி மக்கள் உணர்வு ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் வடகிழக்கு மாநிலங்கள்  முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேல், கனடா, பிரான்ஸ், பிரிட்டன் அமெரிக்கா, போன்ற நாடுகள்இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டு மக்களுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளது.