tamilnadu

img

நாடு பட்டினியில் தவிக்கிறது பிரதமர் மோடி நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புவதில் பிஸியாக உள்ளார்.... ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி;
நாடு பட்டினியில் தவிக்கிறது; ஆனால் பிரதமர் மோடி தனது நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புவதில்  பிஸியாக உள்ளார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உலகளவில் பட்டினியால் தவித்து வரும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள 107 நாடுகளில் இந்தியா 94 ஆம் இடத்தில் உள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:மோடி தனது நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புவதில் பிஸியாக இருப்பதுதான் நாடு பட்டினியில் தவிப்பதற்குக் காரணம். ‘பட்டினியால் தவிக்கும் மக்களைக் கொண்ட நாடாக இந்தியா 94 ஆம் இடத்தில் உள்ளது. இதற்கு மத்திய அரசே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளை விட இந்தியா பின் தங்கியிருப்பது பற்றிய வரைபட விளக்கத்தையும் ராகுல் வெளியிட்டுள்ளார்.