tamilnadu

img

பாஜகவுக்கு வாக்களிக்க அபிநந்தன் சொன்னதாக காட்டும் பதிவு உண்மையில்லை பிபிசி நியூஸ் உண்மை கண்டறியும் குழு அம்பலப்படுத்துகிறது

புதுதில்லி, ஏப். 19- இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்தாம் பாஜக-வை ஆதரிப்பதாகவும், தமது வாக்கு அந்தக் கட்சிக்குதான் என்று கூறுவதாகவும் காட்டும் சமூக ஊடகப் பதிவு ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பகிரப்படும் அந்தப் புகைப்படப்பதிவில் இருக்கும் நபர் அபிநந்தன் போலவே உள்ளார்.அந்தப் பதிவில் இப்படி விவரிக்கப்பட்டுள்ளது, ‘‘இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன்வர்தமான் பாஜக-வை ஆதரிக் கிறார். அவரும் பிரதமர் நரேந்திர மோடிக்குதான் வாக்களி த்துள்ளார். இந்த சூழலில் பிரதமர்நரேந்திர மோடியைவிட வேறு எவரும் சிறந்த பிரதமர் இல்லை. நண்பர்களே, ஜிஹாதிகளும், காங்கிரஸூம் உணரட்டும் அவர் களால் ராணுவ வீரர்களை உயி ருடன் மீட்க முடியாது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இயக்கிய போர் விமானம் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் பிப்ரவரி 27 ஆம் தேதிசுடப்பட்டது. பின் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபட்ட அவர், மார்ச் 1 ஆம் தேதி இந்திய அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த சமயத்தில் இரண்டு நாடுகள் இடையே பெரிய அளவில் பதற்றம்நிலவியது.பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீரின்புல்வாமாவில், நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் இறந்தனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ளஆயுதக் குழுக்களின் முகாம்களை பிப்ரவரி 26 ஆம் தேதி தாக்கியதாக இந்தியா கூறியது.


உண்மையில்லை

இதற்கு பதிலடியாக, மறுநாளே(பிப்ரவரி 27 ஆம் தேதி) இந்திய வான் பரப்பில் புகுந்து தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது. அப்போது பாகிஸ்தானின் விமானத்தை திருப்பித் தாக்கிய அபிநந்தனின் விமானம் தாக்கப்பட்டதாகவும் அந்நாடு கூறியது. இந்நிலை யில், அபிநந்தன் ஒரு கதாநாயகனாக இந்தியாவில் கொண்டாடப் படுகிறார்.இவர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயமடைய வலதுசாரிகுழுக்கள் முயல்வதாக தெரி கிறது. நமோ பக்தர் மற்றும் மோதிசேனா ஆகிய வலதுசாரி குழுக்கள் இந்த பதிவை பரவலாக பகிர்ந்தன. இது பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டது.  வாட்ஸ் ஆப் பயனர்கள் அந்த பதிவின் உண்மைத் தன்மையை அறிய அந்த புகைப்படத்தை பிபிசி-க்கு அனுப்பினர். அந்த புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அது உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.


வேற்றுமைகள் ஏராளம்

அந்த விமானி தேசிய நாயகனாக கொண்டாடப்படுகிறார். அவரது மீசை மிகப்பிரபல மடைந்தது. இந்தியர்கள் அவரை போல மீசை வைத்துக்கொள்ள விரும்பினர். அபிநந்தன் போலமீசை வைத்து, மூக்கு கண்ணாடி போட்டிருக்கும் அந்த நபர் பாஜக-வின் தாமரை சின்னம் பொறித்த துண்டு அணிந்திருந்தார். அந்த புகைப்படத்தை துல்லியமாக ஆராய்ந்ததில் ஏராளமான வேற்றுமைகள் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபருக்கும் அபிநந்தனுக்கும் இருப்பது தெரியவந்தது.அபிநந்தனுக்கு உதட்டுக்கு கீழ் மச்சம் இருக்கும். ஆனால், இந்த புகைப்படத்தில் இருக்கும் நபருக்கு அவ்வாறான மச்சம் ஏதும் இல்லை. அந்த மனிதருக்கு பின்னால் ‘‘சமோசா சென்டர்’’ என்று குஜராத்தியில் எழுதப்பட்டிருக்கும். இதன் மூலம் இந்தப் படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதாக இருக்க லாம் என்று தெரிகிறது. ஆனால், குஜராத்தில் இன்னும் தேர்தலே தொடங்கவில்லை.


பணியில் இருக்கிறார் அபிநந்தன்

இதற்கெல்லம் மேலாக அபிநந்தன் மார்ச் 27 ஆம் தேதிஇந்திய கட்டுப்பாட்டில் இருக்கும்காஷ்மீரில் பணிக்கு சேர்ந்து விட்டார். மருத்துவ அறிக்கையின் படி, மருத்துவர்கள் அவரை நான்கு வாரம் ஒய்வெடுக்க சொன்னார்கள். ஆனால், முன்னதாகவே அவர் பணியில் சேர்ந்து விட்டார். அவர் இப்போதும் இந்திய விமானப் படையில்தான் பணியாற்றுகிறார். இந்திய விமானப் படை சட்டம் 1960-ன் படி விமானப் படையில் பணியாற்றுகிறவர்களுக்கு அரசியல் கட்சிகளில் சேர அனுமதியில்லை.இந்திய விமானப் படையில் பணியாற்றுகிறவர்கள், அந்த நபர் விங் கமாண்டர் அபிநந்தன் இல்லை என்று தீர்க்கமாக சொல்லு கிறார்கள்.

;