இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2 வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தெடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் தமிழகம் தொடர்ந்து 2 ஆம் இடத்தில் இருந்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தரும் தகவலை நேற்று வெளியிட்டது.
அதுமட்டுமில்லாமல் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் நகரங்களின் பட்டியலில் தமிழக தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. மேலும் 2,461 பேர் தமிழகத்தில் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.