கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தருமபுரி, அக்.11- நீர் நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட் டினார். காவிரி, தென்பெண்ணை ஆறு களின் உபரிநீரை ஏரிகளில் நிரப் பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு வியா ழனன்று தருமபுரியில் நடை பெற்றது. இம்மாநாட்டில் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது, தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டமான தரும புரியில் 74 சதவிகிதம் பேர் விவ சாயத்தை நம்பியுள்ளனர். இந் நிலையில் மழையின்மை, வறட் சியினால் மக்கள் வெளிமாவட் டங்களுக்கு வேலைதேடி செல் லும் அவலம் நிலை தொடர்கிறது. இங்கு உள்ள கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது நூறுநாள் வேலை மட்டுமே. இத்திட்டத்தின் மூலம் ஏரி, குளம், கால்வாய்களை தூர்வார முடியும். இங்குள்ள பெரும்பாலான ஏரி, குளம், கால் வாய்கள் மற்றும் அணைகள் மன்னர் ஆட்சி காலத்தில் உரு வாக்கப்பட்டது.
வீணாகும் மக்கள் வரிப்பணம்
இந்நிலையில் 1936 ஆம் ஆண்டு மேட்டூர் அணை உருவாக் கப்பட்டது. இந்த அணையிலி ருந்து 250 கி.மீ., காவிரி நீர் பய ணிக்கிறது. காவேரி ஆற்றின் குறுக்கே 8 இடங்களில் அணை கட்டி நீர்த்தேக்க முடியும். இதே போல் திருச்சி கொள்ளிடத் தில் அணைகட்டியிருந்தால் உப ரியாக ஓடும் 30 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். ஆனால் 75 ஆண்டுகால சுதந்திர இந்தியா வில் ஆட்சியாளர்கள் புதிதாக அணைகள், ஏரிகள், குளம் மற்றும் கால்வாய்கள் என எதையும் உருவாக்கவில்லை. மேலும் நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக் கையும் எடுக்கவில்லை. தற்போது தமிழக முதல்வர் ஏரி,குளம் தூர் வார ரூ.300 கோடி வரை ஒதுக் கீடு செய்து இருப்பதாக கூறுகி றார். மழைகாலத்தில் எப்படி தூர் வாரமுடியும். கோடை மற்றும் வறட்சி காலத்தில் தான் தூர் வார பணம் ஒதுக்கி இருக்க வேண் டும். தற்போது தூர்வார நிதி ஒதுக் கீடு செய்து இருப்பது மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதுடன், ஆளும் கட்சியினர் கொள்ளை யடிக்கவே உதவும். தமிழகத்தில் ஆண்டுக்கு 150 டிஎம்சி தண்ணீரை மட்டுமே சேமிக்கும் நீர்நிலை கட்டமைப்பு உள்ளது. ஆனால் வருடந்தோறும் 400 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. உபரிநீரை சேமிக்க தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. வெள்ளமும், வறட்சியும் தானாக வருவ தில்லை. நீர்நிலைகளை பாது காக்காததால் வறட்சி ஏற்படு கிறது. தமிழகத்தில் 36 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இவைகளை தூர்வாரவில்லை. மழை வரும் போது உபரிநீர் சேமிக்கப்படுவ தில்லை. இதனால் வறட்சி ஏற் படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் ஆட்சியாளர்கள் தான். ஏரிகளை தூர்வாருவதற்கு பதி லாக ஏரியை பட்டா போட்டு விற் கின்றனர்.
விவசாயத்தை பாழ்ப்படுத்தும் திட்டங்கள்
இந்த மாவட்டத்தை பாது காக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை. ஆனால் மக்கள் விரும் பாத ரூ.10 ஆயிரம் கோடியில் எட்டு வழிச்சாலை, 6 வழிச்சாலை, உயர் அழுத்த மின் கோபுரம், எரிவாயு குழாய் பதிப்பு ஆகிய திட்டங் களால் விவசாய நிலங்களை பாழ்படுத்துகிறது. இந்த ரூ.10 ஆயிரம் கோடியை ஏரி மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளை பாதுகாக்க பயன்படுத்தினால் விவசாயம் செழிக்கும். மக்கள் வளம்பெறுவார்கள். ஆனால் அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்காக இந்த நாசகார திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த நினைக்கிறது. மத்திய அரசு நூறுநாள் வேலைத் திட்டத்தில் ரூ.40 கோடி குடும்பங்களுக்கு வெறும் ரூ.60 ஆயிரம் கோடி பணம் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் பெரும் முத லாளிகள் 100 பேருக்கு மட்டும் வரிச்சலுகையாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை கையில் வைத்திருப்பவர்களுக்கு வரிச்சலுகையை வழங்கி, நாட்டு மக்களை மத்திய அரசு வஞ்சிக் கிறது.
ரபேலுக்கு பூஜை
தமிழகத்தில் சீன ஜனாதிபதி யும், இந்திய பிரதமரும் சந்திக் கின்றனர். மக்கள் சீனம் சோஷலிச குடியரசுஎன பிரகடனத்துடன் 70 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது. சுதந்திர தின விழாவில் தாங்கள் தயாரித்த 540 வகையான ராணுவ தளவா டங்களுடன் அணிவகுப்பில் கலந்து கொண்டு சாதனை படைத் துள்ளனர். ஆனால், நம் நாட்டின் நிலை என்ன? பிரான்ஸிடம் 3 மடங்கு கூடுதல் விலை கொடுத்து ரபேல் விமானத்தை வாங்கியுள் ளனர். இந்த விமானத்தில் உள்ள தொழில் நுட்பத்தை ஆராயாமல் விமானத்திற்கு எலுமிச்சை பழம் வைத்து தேங்காய் உடைத்து பூஜை போடுகிறார் ராணுவத் துறை அமைச்சர். மத்திய அரசு ரயில்வே துறையை தனியார்மயமாக்கி யுள்ளது. இதேபோல் பிஎஸ் என்எல்-ஐ மூட நினைக்கிறது. இவற்றின் சொத்துகளை விற்க முயற்சி நடக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளை மூடப்பட்டு பல லட்சம் தொழிலா ளர்களை வேலையில்லாமல் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆர்எஸ்எஸ் தலைவர் இந்து ராஜ்யம் அமைப்பது என பேசி வருகிறார். இந்தியாவை நிர் மூலமாக்க நினைக்கிறார்கள். மத்திய அரசின் தவறான கொள் கைகளை மாநில அரசு அமல் படுத்தி வருகிறது. தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியே, ஜெயலலிதா ஆட்சியே, எடப்பாடி ஆட்சியே இல்லை. தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டு இருப் பது மோடி தான் என அவர் குற்றம் சாட்டினார்.
சாதிய ரீதியாக பிளவுபடுத்தும் அபாயம்
மேலும், தருமபுரி மாவட்டத் தில் 85 சதவிகித மக்கள் தாழ்த் தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பொருளாதாரத்தில், வாழ்நிலையில் ஒரே மாதிரி இருக் கின்ற சூழலில் வர்க்க ரீதியாக கோரிக்கைகளுக்காக போராடா மல் மக்களை சாதிய ரீதியாக பிளவு படுத்தும் வேலையை சில அமைப்புகள் செய்கின்றன. இதை மக்கள் ஒற்றுமையுடன் முறிய டித்து தருமபுரி மாவட்ட கோரிக் கைகளுக்காக தொடர் போராட் டம் நடத்த வேண்டும் எனவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித் தார்.
மக்களை திரட்டுவோம்
இதைத்தொடர்ந்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.தங்க வேல் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் அமைப்புகள் தொடர் போராட்டத்தை மேற்கொண்ட தன் விளைவாக தற்போது தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் காவிரியாற்றின் உபரிநீரை ஏரிகளுக்கு நீர் நிரப் பும் திட்டம் நிறைவேற்ற மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்தி மக்களை திரட்டி போராட வேண் டும். மேலும், மத்திய, மாநில அரசு கள் தனியார்மயத்தை ஆதரிக் கின்றன. இதனால் விவசாய நிலங் களை பாழ்படுத்தும் திட்டங்களை நிறைவேற்ற நினைக்கிறது. முன்பு பள்ளி, மருத்துவமனைகளை அரசு நடத்தியது, தற்போது தனி யார் முதலாளிகள் நடத்தி வரு கின்றனர். ஆகவே, மக்களின் அடிப்படை தேவையான கல்வி மற்றும் சுகாதாரம் கிடைக்க போராட வேண்டும் என தெரி வித்தார். இதேபோல் மாவட்டச் செய லாளர் ஏ.குமார் பேசுகையில், கடந்த 25 ஆண்டு கால போராட் டத்தின் விளைவாக ஒகேனக் கல் குடிநீர் திட்டம் நிறைவேற் றப்பட்டது. அதேபோல் காவிரி யாற்றின் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு போராட் டங்களை முன்னேடுப்போம் என தெரிவித்தார். நிறைவாக தருமபுரி ஒன்றியச் செயலாளர் என்.கந்தசாமி நன்றி கூறினார்.