tamilnadu

img

தில்லி பல்கலைக்கழகத்தில் சாவர்க்கருக்கு சிலை!

புதுதில்லி;
இந்து மகாசபையின் தலைவராக இருந்து, இந்துத்துவ வெறுப்பு அரசியலை விதைத்தவர்களில் முதன்மையானவர் வி.டி. சாவர்க்கர். நாட்டின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த இவர், மகாத்மா காந்தி படுகொலையிலும் குற்றம் சாட்டப்பட்டவர்.இவருக்குத்தான் ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி, தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் சிலை வைத்து, பிரச்சனையை ஆரம்பித்துள்ளது. யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக இந்தச் சிலையை நிறுவியுள்ள ஏபிவிபி, சாமர்த்தியமாக பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் சிலைகளையும் சாவர்க்கர் சிலையுடன் இணைத்துள்ளது.இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸூக்கு சமமாக, சாவர்க்கருக்கு சிலை வைப்பதை ஏற்க முடியாது என்றும் இந்தச் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் கொந்தளித்துள்ளனர்.

;