tamilnadu

img

இலங்கை அகதிகள் கைது

இராமநாதபுரம், டிச.17- தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகில் இலங்கைக்குச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப் பட்டனர்.  கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்த கியூ பிரிவு போலீசார் சிறுவன் ஒருவனுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் 3 ஆண்கள் உட்பட 5 பேரை பிடித்து விசாரித்தனர். சென்னை, திருவள்ளூர் அகதிகள் முகாம்களில் இருந்து வருவதாகக் கூறிய அவர்கள், கடந்த 2012ஆம் ஆண்டு அகதிகளாக தமிழகம் வந்ததாக வும் தற்போது இலங்கையில் அமைதி திரும்பிய தால் அங்கு செல்ல முயன்றதாகவும் கூறியுள்ளனர். அகதிகள் தங்கள் சொந்த தேசத்துக்குத் திரும்பிச் செல்ல பல்வேறு சட்ட நடைமுறைகள் உள்ள நிலையில், சட்டவிரோதமாக இவர்கள் தப்பிச் செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டனர். 

;