tamilnadu

img

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ பண்டிட் என்ற முன்னாள் மாணவி நியமிக்கப்பட்டுள்ளார். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணை வேந்தராக இருந்த ஜகதீஷ் குமார், கடந்த வாரம் யுஜிசி தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாந்திஸ்ரீ பண்டிட் இதற்கு முன்னதாக, மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வந்தார். அவரை தற்போது, டெல்லி ஜேஎன்யுவுக்கு துணைவேந்தராக ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.
தற்போது  59 வயதான சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.