tamilnadu

img

வெளிநாடுகளில் கடன்பத்திரங்கள் விற்பனை? மோடி அரசின் முடிவால் பாதகமே ஏற்படும்...

புதுதில்லி:
வெளிநாடுகளில் கடன் பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டத்தால், நன்மையை விட கேடுகளே அதிகம் என்று பொருளாதார வல்லுநரும், திட்டக்குழுமுன்னாள் துணைத்தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.

நாட்டின் நிதிப் பற்றாக்குறையை குறைக்க உள்நாட்டு நிதி சார்ந்த நடவடிக்கைகளை மட்டுமேநம்பி இருக்காமல், வெளிநாடுகளில் இருந்து நிதித் திரட்டும் வகையில் கடன் பத்திரங்களை வெளியிடமோடி அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 70 ஆயிரம் கோடிநிதி திரட்ட இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே, மோடி அரசின் இந்த முடிவு சரியானது அல்லஎன்று அலுவாலியா கூறியுள்ளார்.“முன்பே இதுபற்றி பலமுறைதீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆனால், இதில் நன்மைகளைவிட கேடுகளே அதிகம் என்பதால்கைவிடப்பட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.“நிதியை, அந்நிய செலாவணியில் திரட்ட விரும்பினால், வெளிநாட்டு முதலீட்டாளர்களை, இந்தியாவில் விற்கப்படும் கடன் பத்திரங்களை வாங்க வைப்பது குறித்துதிட்டமிடலாம். அதற்காக கடன் பத்திரங்களை அந்நிய செலாவணி மதிப்பில் வெளிநாடுகளில் விற்பனை செய்வது சரியான முடிவல்ல. கடன் பத்திரங்கள் இந்தியரூபாய் அடிப்படையில் இருப்பதுதான் அரசுக்கு நல்லது.மாறாக, அரசு தற்போது எடுத்துள்ள முடிவால், பிற நாடுகளைச்சேர்ந்த வணிக வங்கிகள் மட்டுமே பெரிய அளவில் லாபம் ஈட்டும். மாறாகஅரசுக்கு பலன்கள் மிக மிகக் குறைவு” என்று பாதகங்களை அலுவாலியா அடுக்கியுள்ளார்.மாண்டேக் சிங் அலுவாலியா,ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். மிக இளம் வயதிலேயே உலக வங்கியில் பணியாற்றியவர். ஐஎம்எப்-பிலும் அதிகாரியாக பணியாற்றினார். இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்துவதில், மன்மோகன் சிங்கிற்கு அடுத்தப்படியாக முன்னின்று செயல்பட்டவர்.

;