வி.டி.சாவர்க்கரின் அண்ணன் 70 ஆண்டுகளுக்கு முன்பே புரட்டுவேலை
புதுதில்லி, நவ.9- சமய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு- திருக்குறள் என்ற உலகப் பொதுமறை யை படைத்தளித்தவர் திருவள்ளுவர். அவ ரும் சமய எல்லைகளை கடந்தவராகவே, உலக மக்களால் கொண்டாடப்பட்டு வரு கிறார். ஆனால் திடீரென அவரை ஒரு இந்து என கூறி, அவருக்கு காவிச்சாயம் பூசும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. அதற்கு கடும் எதிர்ப்புகளும் கண்ட னங்களும் எழுந்துள்ளன. இதனிடையே, கிறிஸ்தவம் என்ற ஒரு தனி மதத்தையே தோற்றுவித்தவரான இயேசு கிறிஸ்துவையும் ஒரு இந்துதான் என்றுகூறி, ஆர்எஸ்எஸ்-காரர்கள் அவரை யும் அபகரிப்பதற்கு திட்டம் போட்டதை யும், இயேசுவை ஒரு தமிழ் பிராமணர் என்று நிறுவ முயற்சி செய்து, 70 ஆண்டு களுக்கு முன்பே நூல் ஒன்று வெளியிடப் பட்டதையும் ஊடகங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்துள்ளன. அந்த நூலை எழுதியவர்- ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான பாபாராவ் சாவர்க்கர் எனப்படும் கணேஷ் தாமோதர சாவர்க்கர் ஆவார். இவர் வேறு யாருமல்ல, சுதந்திரப் போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு எழுதிக்கொடுத்து விட்டு, அந்தமான் சிறையில் இருந்து விடுதலையானவரும், காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டவருமான வி.டி. சாவர்க்கரின் உடன் பிறந்த சகோதரர்தான்.
இவர், சுமார் 73 ஆண்டுகளுக்கு முன்பு, 1946-இல் ‘இயேசு அறிமுகம்’ (ஜீசஸ் பரிச்சய்) என்ற மராத்திய நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இயேசு கிறிஸ்து தமிழகத்தில் பிறந்த பிராமணக் குடும் பத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஒரு தீவிர சிவபக்தர், இமயமலையில் சிவ வழி பாடு நடத்திக்கொண்டிருந்தவர் என் றெல்லாம் கூறியுள்ளார். மேலும், “பாலஸ்தீனத்தில் வாழ முடி யாத நிலை ஏற்பட்டு, பாலஸ்தீனிய அரே பிய பகுதிகள் வழியாக பயணித்த இயேசு கிறிஸ்து, ஒரு யோகியுடன் இணைந்து இந்தியா வந்து வேதமும் யோகாவும் கற்றுக்கொண்டார்; ஜீசஸ் க்ரைஸ்ட் என்பது வேறு ஒன்றுமல்ல, கேஷவ் கிருஷ்ணா என்பதுதான் அவ்வாறு மருவி விட்டது என்றும் ‘ஆராய்ச்சி’ செய்துள் ளார். அத்துடன், அரேபிய காலனிய நாடு கள் அனைத்தும் இந்துக்களின் பகுதியிலி ருந்தே வந்தன என்றும், இஸ்ரேல் என்பது ஈஸ்வரல் என்பதன் மருவல்தான், அங்கு வாழ்ந்த யூதர்களும் கூட இந்துக்களே என்றும் கதையடித்துள்ளார். அந்தமான் செல்லுலார் சிறையில் இருந்தபோது தனக்கு அறிமுகமான ஜீசஸ் குறித்த தகவல்களையும், பின்னாளில் 1924 -25 ஆண்டுக்காலத்தில் ஆந்திர பிர தேசத்தை சேர்ந்த ராமசாமி ஐயர் என்பவர் மூலம் கிடைத்த தகவல்களை யும், சென்னையைச் சேர்ந்த பெயர் தெரி விக்காத ஒருவரின் ஆராய்ச்சி முடிவை யும் வைத்தே இந்த நூலை எழுதியதாக வும் கணேஷ் சாவர்க்கர் குறிப்பிட்டுள்ளார். 1942-ஆம் ஆண்டு எழுதப்பட்டு, 1946-ஆம் ஆண்டு வெளியான இந்த நூல், அதற்குப்பிறகு 70 ஆண்டுகளாக மறு பதிப்பு செய்யப்படவில்லை. 2016-ஆம் ஆண்டில் கணேஷ் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர்தான் இதனை மறு வெளியீடு செய்துள்ளார். சங்-பரிவாரங்கள் தற்போது திரு வள்ளுவரை இந்து என்று கூறி திருகு வேலை செய்துவரும் நிலையில், இயேசு வை இந்துவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தற்போது முன்னுக்கு வந் துள்ளன.