தில்லி காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த காற்று மாசுபாட்டால் தில்லி மக்கள் சுவாச கோளாறு உள்ளிட்ட பல பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் காற்று மாசுபாட்டை குறைக்க தற்போது பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகையை யொட்டி இன்று முதல் வரும் 30ம் தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தில்லியின் பல பகுதிகளில் எந்திரங்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடித்து மாசு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.