சென்னை:
நாடு முழுவதும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு வெள்ளியன்று (அக்.23) இரவு வெளியானது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு, மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா தொற்று காரணமாகப் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு அக். 4ஆம் தேதி நடைபெற் றது. தேர்வில் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட மையங்களில் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வை எழுதினர். வழக்கமாக முதல்நிலைத் தேர்வு நடைபெற்றுக் குறைந்தது ஒரு மாதத் துக்குப் பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும்.இந்த முறை சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்முறையாகத் தேர்வு நடைபெற்ற 19 நாட்களிலேயே முடிவு வெளியிடப் பட்டுள்ளது. இதில் 10,556 மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் தேர்வாகியுள்ளனர். ஜனவரி 8 ஆம் தேதி முதல் முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற ஆட்சிப் பணிகளுக்கான 790 பணி இடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப் படுவது குறிப்பிடத்தக்கது.