tamilnadu

img

பிரதமரின் சொகுசு விமானம் குறித்து யாரும் கேள்வி எழுப்பாதது ஏன்? ராகுல் காந்தி சாடல்

புதுதில்லி:
பிரதமரின் சொகுசு விமானத்தைக் கண்டுகொள்ளாதது ஏன்? அதையெல்லாம் ஏன் யாரும் பார்ப்பதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை என்று  காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி எம்.பி., சாடியுள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, டிராக்டரில் சோபாவை போட்டுஅமர்ந்து சென்றார். இதை மத்திய அமைச்சர்ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கிண்டல் செய்தனர்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல்காந்தி கூறியதாவது:

என் நலம் விரும்பிகளில் யாரோ ஒருவர்,டிராக்டரில் சோபாவை போட்டுள்ளார். ஆனால், பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக மக்கள் வரிப்பணம் ரூ.8 ஆயிரம் கோடிக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானம்வாங்கப்பட்டுள்ளது. அதில், சோபா மட்டுமின்றி, பிரதமரின் வசதிக்காக சொகுசு படுக்கைகளே உள்ளன. அதையெல்லாம் ஏன்யாரும் பார்ப்பதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை. தன்னுடைய நண்பர் டிரம்ப், அதேபோன்ற விமானத்தை வைத்திருப்பதால், மோடியும் கோடிக்கணக்கான ரூபாயை வீணடித்து இந்த விமானத்தை வாங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.