அகர்தலா:
திரிபுராவில் முதல்வர் பதவியில் இருந்து பிப்லோப் குமார் தேப்பை நீக்குவதற்கு கூட்டணி கட்சியான ஐபிஎப்டியுடன் பாஜகபோட்டித் தலைவர் சுதீப் ராய் பர்மன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஐபிஎப்டி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சுதீப்பும் அவரது குழுவும் தில்லிக்கு வந்தனர். 8 எம்எல்ஏ-க்களைக் கொண்ட ஐபிஎப்டி, மாநில அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ளதாக சுதீப் பாஜக மத்திய தலைமைக்கு தெரிவித்தார்.முதல்வராகும் கனவுடன் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு வந்த சுதீப்புக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தது. அதுவும்2019 மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் பறிபோனது. தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டார் என்கிற குற்றச்சாட்டின் பேரில்சுதீப் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தனக்கு 15 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளதாக அவர் கூறுகிறார். அவருடன் 8 பேர் தில்லிக்கு வந்தனர். ஐபிஎப்டி ஆதரவுடன் பிப்லோப்பை தூக்கியெறிய முடியும்என்று சுதீப் கருதுகிறார். கலகக்காரர்களுக்குஅமைச்சர் பதவிகளை வழங்குவதன் மூலம் பிரச்சனையை தீர்க்க மத்திய தலைமையும் முயல்கிறது. நவராத்திரி கொண்டாட்டங்களுக்குப் பிறகு அமைச்சரவை மறுசீரமைப்புக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.