tamilnadu

img

அயோத்தியில் ராமர் கோவில்: 3 நபர் கொண்ட தனிக்குழு அமைப்பு

புதுதில்லி,ஜன.3- உத்தரப்பிரதேச மாநிலம்  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர் பாக திட்டமிட கூடுதல் செய லாளர் ஜெய்னேஷ் குமார் தலைமையிலான 3 அதி காரிகள் கொண்ட புதிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்த ரவை இக்குழு நிறை வேற்றும். அயோத்தி வழக்கு தொடர்பான உத்தரவுகளை மூன்று அதிகாரிகளும் கையாளுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது. தீர்ப்பில் குறிப்பிட்டபடி 5 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச வக்பு வாரியத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக வும் இந்த குழு நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படு கிறது.

;