சண்டிகர்:
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுகொண்டுவந்துள்ள 3 வேளாண்சட்டங்களுக்கு நாடு தழுவியஅளவில் எதிர்ப்பு எழுந்துள் ளது. பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தற்போது வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், இடதுசாரிகள் மட்டுமன்றி பாஜக கூட்டணி கட்சிகளும்கூட வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை என்று கூறி, அதனைகடுமையாக எதிர்த்து வருகின்றன. சிரோமணி அகாலிதளம்கட்சி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியதுடன், பாஜக கூட்டணியிலிருந்தும் அண் மையில் வெளியேறியது.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாஜக தலைவர்கள் பலரும், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்களில் சிலர் தங்களின் பதவிகளை ராஜினாமாவும் செய்தனர்.அந்த வரிசையில், பஞ்சாப்மாநில பாஜக பொதுச்செயலாளராக இருந்து வந்த மால்விந்தர்சிங் காங் என்பவரும், மோடிஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது கட்சிப் பதவியை தற்போது ராஜி னாமா செய்துள்ளார். இதுதொடர்பாக, மால்விந் தர் சிங், கட்சித் தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
“விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து பலமுறை எனது எதிர்ப்பையும், எச்சரிக் கையையும் விடுத்துவிட்டேன். ஆனால், அதற்கு உரிய மதிப்பும், பதில்களும் கிடைக்காதநிலையில், விவசாயிகளுக் காக, நான் வகித்து வந்த கட்சியின் பொதுச்செயலாளர் என் கிற பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்” என்று தெரிவித் துள்ளார்.இது பாஜக-வை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.